பக்கம்:மதன கல்யாணி-3.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 149 கிருஷ்ணாபுரம் ஜெமீநதார் தமது நெற்றியில் கையை வைத்து அழுத்திக் கொண்டு சிநதனை செயகிறார். பா. குரோட்டன்:- அதிருக்கட்டும். அந்த மனிதன் கொலை செய்து விட்டு ஓடியதைக் கண்டு, தாங்கள் கூச்சலிட்ட பிறகு தானே, தங்களுடைய ஆடகள் அங்கே வந்தார்கள். கி. ஜெமீந்தார்:- கொலைகாரன் குத்திவிட்டு வெளியில் ஓடியதைக் கண்டவுடனே நான் கூச்சலிட்டுக் கொண்டு பின்னால் தொடர்ந்து ஒடினேன். எனக்குப் பின்னால் ஆள்கள் வந்து என்னைத் தாண்டி முன்னால் ஒடித் துரத்தினார்கள். பா. குரோட்டன்:- அப்படியானால், அந்தக் கொலைகாரன் கிழவி இருந்த கட்டிடத்தை விட்டு வெளியில் வந்து பூத்தொட்டிகளுக் குள் நுழைந்த பிறகு தானே ஆள்கள் வந்தார்கள்? கி. ஜெமீந்தார்:- ஆம். பா. குரோட்டன்:- அப்படியானால், கொலை செய்தவன் தான் பூச்செடிக்குள் ஓடினான் என்று, தாங்கள் சொன்னதிலிருந்து வேலைக்காரர்கள் தெரிந்து கொண்டார்களேயன்றி, அவர்கள் நேரில் அதைக் கண்டுணரவில்லையே? கி. ஜெமீந்தார்:- இலலை. பா. குரோட்டன்:- சிாமப நல்லது; இன்னம் ஒரே ஒரு விஷயம். அதை மாத்திரம் சொலலிவிடுங்கள். கிழவியைக் குத்திய கத்தி மிகவும் கூர்மையான கத்தியாகத்தானே இருந்தது? கி. ஜெமீந்தார்:- ஆம். பா. குரோட்டன்:- நீ கள் மைனரை பிடித்த போது அந்தக் கத்தி எங்கே இருந்தது. கி. ஜெமீந்தார்:- அவர் அதை அவருடைய இடுப்பில் சொருகிக் கொண்டிருந்தார். பா. குரோட்டன்:- கொலை செய்துவிட்டு செடிகளுக்குள் விழுந்து தடபுடலாக ஒடுகிற மனிதன் அதை எறிந்துவிட நினைப் பானா, அல்லது, அதைக் கையிலே வைத்துக் கொண்டே போவானா? அப்படி எடுத்துக் கொண்டு போவதாகவே வைத்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-3.pdf/153&oldid=853286" இலிருந்து மீள்விக்கப்பட்டது