பக்கம்:மதுரைக் குமரனார்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Garఅ9 61. துக் கல்விப்பயிற்சி தொடங்கினர். பெற்ற தாய் வேண் டும் உணவு தந்து தமது உடலை வளர்க்க, தந்தை கல்வி யாகிய உணவு தந்து தமது உயிரை வளர்க்க, குமரனுர் செவ்வையாகக் கல்வி கற்று வாலானர். • , - குமரனுர்க்குக் கல்வியறிவு வளர வளா, மாடல ஞர்க்கும் அவர் மனைவியார்க்கும் முதுமை மிகுதலால் தளர்ச்சியுண்டாயிற்று. பெற்ருேர்க்குரிய பணிகள்ைப் புரி வதும் கற்றற்குரிய நூல்களைக் கற்பதும் குமரனுர்க்கு - நாடோறும் கடமைகளாயின. அவருடைய நேர்ம்ை பிறழாத நெஞ்சமும் எல்லார்க்கும் இன்பம் விளைவிக்கும் அவருடைய சொற்களும் ஊரவ ரனேவருக்கும் அவர் பால் பேரன்பு உண்டுபண்ணின. குமரனருக்கு அவர் தம் ஊரருகே இருள்படத் தழைத்துப் பல்வகைப் பூக்களைத் தாங்கி நறுமணங் . கமழ்ந்து தோன்றும் கான்ம் இனிய காட்சிகளை வழங், கிற்று. அதன்கண் வாழும் மாவும் புள்ளும் தத்தம், செயல்களைக் குறைவறச் செய்து இன்புறுவது அவர், நெஞ்சக்கிழியில் எழுதிவைத்ததுபோலப் பதிவுறும். பூக்கள், தம்முடைய வண்ணத்தாலும் நறுமணத்தாலும், வண்டினத்தை அழைத்து அவற்றிற்கு இனிய தேனைத் தந்து மகிழ்விக்கு முகத்தால், தாம் கருக்கொண்டு காய்த் துக் கனிந்து தம் இனத்தைப் பெருக்கும் குறிப்புடைய வாதலைக் குமரனர் கண்டு பெரு வியப்புக்கொள்வார். ஆங்காங்கே சென்று மேயும் ஆனிரைகளுள் நெறிமாறிச் சென்றவற்றைக் காட்டில் வாழும் புலி முதலிய விலங்கு கள் குறிபிழையாது கொன்றுண்டு வாழ்வதும், புலி, வாழ்வதனை முன்பே குறிப்பா லோர்ந்துகொள்ளும் விலங்குகள். தம் உயிர்காத்துக்கொள்வது குறி த் து ஒடி உலமருவதும், குமரனுருடைய மனக் கண்ணுக்கு அறிவுக்காட்சி வழங்கும். கவரிமா முதலிய மான்கள் தம் உடலில் உள்ள மயிரில் ஒன்று நீங்கினும் தரியாது உயிர் துறப்பது கானுக்தோறும் குமாருைக்கு மான முடையாது சிறிது காழ்வு வந்தவிடத்தும் பொருது