பக்கம்:மனக் குகை (நாடகம்).pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனக் குகை 35 மனமருத்துவர் (யோசனையோடு) : அப்படியா சரி அவரை உள்ளே வரச்சொல். (சீதா வெளியே சென்று மாதவன அழைத்து வரு கிருள்) மாதவன் : நமஸ்காரம், டாக்டர். மனமருத்துவர் : வாருங்கள், நமஸ்காாம். இப்படி செளகரியமாக உட்காருங்கள். அம்மா, சீதா நீங்கள் இங்கேயே இருக்கி நீர்களா அல்லது......? மாதவன் : அவள் இங்கேயே இருக்கலாமே? சீதா : இல்லை டாக்டர். நான் வெளியிலே இருக்கிறேன். அவரோடு தாராளமாய்ப் பேசுங்கள். [சீதா வெளியே போகிருள்.) மனமருத்துவர் : மாதவன், நீங்கள் இத்தப் புது முறை யான சிகிச்சையைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர் களா ? மன மருத்துவம் என்று இதைச் சொல்லு வார்கள். இந்தச் சிகிச்சையிலே மனத்தை அறி வது கான் முக்கியம். மாதவன் . அதற்கு ஏதாவது எங்கிரம் உண்டா ? இரு தயத் துடிப்பை அறிவதற்கு மார்புச்சோதனை செப் பும் கருவி யிருக்கிறதுபோல இதற்கும் ஏதாவது கருவி உண்டா : மனமருத்துவர் : நீங்களேதான் எந்திரம். நீங்களே தான் கருவி. உங்களை வைக்கே இந்தச் சோதனை யைச் செய்து விடலாம். மாதவன் : எனக்குப் புரியவில்லையே, டாக்டர் ! தானே எந்திரமா ?