பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
9. தமிழ் வளர்ச்சிக்கு மொழியியலாரின் பங்கு


தமிழ் வளர்ச்சிக்கு மொழியியலாரின் பங்கும் சிறிது உண்டு. அப்பங்கை ஆராய்வதற்கு முன் ‘எந்தத் தமிழ் வளர்ச்சிக்கு?’ என்னும் வினாவிற்கு விடை காணல் வேண்டும்.

ஒரு வேடிக்கைக் கதை உண்டு. நோயாளி ஒருவன் சாகுந்தறுவாயில் இருந்தபோது அவன் உயிரைப் பிடிக்க எமன் சென்றானாம். நீ யார்? என்று நோயாளி கேட்டானாம். நான் எமன் என்ற பதில் வந்தது. உடனே நோயாளி, நீ பழைய எமனா? புதிய எமனா? என்று வினவினானாம். திடுக்கிட்ட எமன், புதிய எமன் ஒருவன் இப்போது கடவுளால் உண்டாக்கப்பட்டுள்ளான் போலும் - இவனது உயிரைப் பிடிக்கும் பொறுப்பு புதிய எமனுடையது போலும் - நமக்கு ஏன் வம்பு? என்று வாளா திரும்பி விட்டானாம். ஒரே எமன்தான்.

இந்தக் கதை இங்கே ஏன் சொல்லப்படுகிறதெனின், தெனாவிராமன் கறுப்பு நாயை வெள்ளை நாயாக்க முயன்றதைப் போல, இன்றைய மொழியியலார் சிலர், பழைய தமிழைத் திருத்தியும் மாற்றியும் புதிய தமிழ் படைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

மொழியியலாரின் அடிப்படை நோக்கம் நல்லதே. தமிழை வளர்க்க வேண்டும் என்னும் நல்லெண்ணம்