பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுந்தர சண்முகனார்

123



புதுச்சேரியில் வள்ளலார் சன்மார்க்க சங்கத்தில் நான் ஒரு நாள் பிரபுலிங்கப் பாடல் ஒன்றைப் பார்த்து விளக்கிக் கொண்டிருந்தபோது, வந்திருந்தவர்களுள் ஒருவரான ந. மகாலிங்கம் என்பவர் என்னை நோக்கி, நீங்கள் பிரபு லிங்கலீலைப் பாடலைப் பார்த்துப் படிக்கிறீர்களே - எங்கள் தாத்தா பிரபுலிங்கலீலைப் பாடல் முழுவதையும் பார்க்காம லேயே ஒப்பிப்பார் என்று கூறினார். பிறகு நான் அவரிடம் சில பாடல்களைப் பார்க்காமல் ஒப்பித்துக் காட்டினேன்.

1.1.1. நூல் நுதலிய பொருள்

நூல் நுதலிய பொருள் புராணக் கதை போன்றது தான். கதையில் நம்பிக்கை யிராவிடினும், பாடல்களில் உள்ள ஈடு இணையற்ற வளமான கற்பனை நயங்களைச் சுவைக் கலாம். கதை வருமாறு:

கைலாயத்தில் சிவனும் சிவையும் உரையாடுகின்றனர். மண்ணுலகில் உள்ள என் கூறாகிய அல்லமப் பிரபுவை யாராலும் தன்பால் அகப்படும்படிக் கட்டுப்படுத்தி வெல்ல முடியாது என்று சிவன் கூறினார். மந்த குணமாகிய மாயையைப் பெண்ணாக அனுப்பி அல்ல.மரைக் கட்டுப்படுத்தி வெல்லும்படி யான் செய்வேன் எனச் சிவை சூள் உரைத்தாள். பின் மந்தகுண மாயை, மையக்குண விமலை, உயர்குண மாதேவி ஆகியவர்களை அனுப்பியும் அல்லமரை வெல்ல முடியவில்லை. பின்னர்ச் சிவை தோல்வியை ஒப்புக்கொண்டாள்.

இவர்களை வென்ற அல்லமர் பின்னர் மாற்றுக் கருத்து கொண்டிருந்த அறிஞர்கள் பலரை வென்று அருளாளர் களாக்கி வீடுபேறு அடையச் செய்தார். இது கதை.

அல்லமப் புரபுவின் லீலைகளை அதாவது அருளை அடிப்படையாகக் கொண்ட திருவிளையாடல்களைக்