பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134

மனத்தின் தோற்றம்



அன்றியும், - வெள்ளைக் கொடிகள் புகழ்போலவும் வெண்மையான அலைபோலவும் பரந்து பறந்தனவாம் எனக் கம்பர் கூறியுள்ளார்:

“தானைமாக் கொடி-புகழ் எனக் கால்பொரப் புரண்ட
வானயாற்று வெண்திரையென வரம்பில பரந்த” (3-9-7)

மற்றும், நிலவின் வெண்மையான ஒளி, இராமனது புகழ் புகுந்து உலவியதுபோல் இருந்ததாம்:

“அன்னவன் புகழ் புகுந்து உலாயதோர்
பொலிவும் போன்றதே” (5-1-65)

என்பன கம்பரின் பாடல் பகுதிகள்.

3.2 கற்பு முல்லை

கற்புக்கும் முல்லைக்கும் நெருங்கிய தொடர்புண்டு. கற்புடைய மகளிர் தம் மனையில் முல்லைக் கொடி வளர்ப்பார்களாம்; முல்லை மலரைச் சூடிக் கொள்வார் களாம். இது பல இலக்கியங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது. சில காண்பாம்:

சிலப்பதிகாரத்தில்:

“இல்வளர் முல்லையொடு மல்லிகை அவிழ்ந்த
பல்பூஞ் சேக்கைப் பள்ளி” (4:27, 28)
“மாதவி, மல்லிகை, மனைவளர் முல்லைப்
போது விரி தொடையல்” (13:120, 121)

குறுந்தொகையில்:

“மனை எல்லறு மெளவல் காறும்
பல்லிருங் கூந்தல்” (மெளவல்=முல்லை 19:4,5)

நற்றிணையில்:

“மனைகடு மெளவலொடு ஊழ்முகை யவிழ” (11:6)