பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

மனத்தின் தோற்றம்



என்னும் பாடலில் மிகவும் நயமாகக் கூறியுள்ளார். 'கல்லைக் கண்டால் நாயைக் காணோம் - நாயைக் கண்டால் கல்லைக் காணோம்' - என்று கூறும் முதுமொழி, கல்லால் ஆன நாயின் தொடர்பாக எழுந்ததே.

இந்தக் கருத்தைத் திருவள்ளுவர் என்னும் தமிழ் அறிஞர் திருக்குறள் என்னும் நூலின் பாடல் ஒன்றில் மிகவும் நுட்பமாகப் பொதித்து வைத்துள்ளார். மனைவியைப் பிரிந்து வெளியூர் சென்றிருந்து திரும்பிய கணவன், மனைவியை நோக்கி, உன்னை நான் அடிக்கடி நினைத்தேன் என்று கூறினானாம், உடனே அவள், “நீங்கள் என்னை அடிக்கடி மறந்திருந்ததனால் தானே அடிக்கடி நினைக்க வேண்டி நேர்ந்தது; ஏன் அவ்வாறு மறந்தீர்கள்?' என்று கூறி, அவனைத் தழுவாமல் ஊடல் கொண்டாளாம்.

“உள்ளினேன் என்றேன் மற்று
என் மறந்தீர் என்றென்னைப்
புல்லாள் புலத்தக்க னள்". (1316)

(திருக்குறள் - காமத்துப்பால் புலவி நுணுக்கம்) என்பது அப்பாடல். மனைவி என்னும் துண்டலுக்குத் துலங்காமல், வேறொன்றிற்குத் துலங்கியதை இது குறிக் கின்றது. எனவே, மனம் ஒன்று தனியே இருப்பதாகவும், அது வேறு எங்கேயோ வேறு எதிலோ ஈடுபட்டிருப்பதா கவும், சிலர் கூறுவது பொருந்தாது. அன்னார் வேறொன்றும் கூறுவர்:

திறமை மிக்க ஒருவர் ஒரே நேரத்தில் பல செய்தி களுக்கு ஈடு கொடுக்கிறார். ஒரே நேரத்தில் எட்டுச் செய்திகளைக் கவனிப்பதற்கு அட்டாவதானம் என்றும், பத்துச் செய்திகளைக் கவனிப்பதற்கு 'தசாவதானம்' என்றும், பதினாறு செய்திகளைக் கவனிப்பதற்குச் சோடசாவதானம் என்றும் பெயராகும். மனம் என்னும்