பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுந்தர சண்முகனார்

139



“மனத்துளது போலக் காட்டி ஒருவற்கு
இனத்துள தாகும் அறிவு” (454)

என்பன குறள்கள். இந்த அடிப்படையுடன் பிரபுலிங்க லீலைக்கு வருவோம்.

திருநீறு (விபூதி) மிக்க பெருமைக்கு உரியது என்பதைச் சைவ நூல்களில் பரக்கக் காணலாம். இதற்கு ஞான சம்பந்தரின் தேவாரத் திருநீற்றுப்பதிகம் ஒன்றே போதுமே.

திருநீறு அணிந்து தூய்மையாயிருப்பின், உள்ளத்தில் உண்டாகும் உலக மாயையை உலக மயக்கத்தைத் திருநீறு போக்கும் என்பர். அந்தத் திருநீறே சாரக்கூடாத இனத்தைச் சார்ந்ததும் தீய உணர்வை உண்டாக்குகிறதாம்.

மாயை என்னும் மிக்க அழகிய பெண் சிவன் கோயிலை அடைவதற்காகத் தெருவிலே வந்துகொண்டிருக்கின்றாள். அவள்நெற்றியில் திருநீற்றை நிரம்பப் பூசிக்கொண்டுள்ளாள். அவளை நோக்கியதும் காம உணர்வு கொள்ளும் இளைஞர்க்கு, அவள் அணிந்துள்ள திருநீற்றின் பொலிவு மேலும் திய உணர்வைத் தூண்டுகிறதாம். திருநீறு அணிந்த தோற்றம் அவ்வளவு இவர்ச்சியாயிருக்கிறதாம், இளைஞர் களின் உடலை அதிரச்செய்து காமத்தீயை உண்டாக்கு கிறதாம். அறிவு இனத்தியல்பதாகும் எனப் பெரியோர் கூறியது உண்மையே போதும் - என்று கூறுகிறது. ஒரு பாடல்:

“இனத்தியல்ப தாகும் அறிவென்பது உண்மையே,
மனத்துயர் செயும் மயல்மாற்றும் நீறுதான்,
அனிச்ச மெல்லடியினார் துதல் அடுத்தலும்
பனித்து உடல் வெதும்பும் மால் படுத்தலால் என்பார்” (4-34)