பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

202

மனத்தின் தோற்றம்



மொழியில் மெய்யீற்றுச் சொற்களே இல்லை என்னும் கருத்தோடு இந்தக் கருத்து ஓரளவு ஒத்து வருகின்ற தல்லவா? மற்றும், கன்னடத்திலும், இருள்=இருளு, தாள் = தூளு; கூலிகாரர்: கூலிகாரரு என மெய்யிறு 'உ' சாரியை பெறுவ துண்டு. பேச்சு வழக்கில் தமிழிலும் எழுத்து வழக்கில் கன்னடத்திலும் மெய்யீறு ஒலிக்கப் பெறாமையும் ஒரு சில இடங்களில் 'உ' சாரியை வருவதும் இவ்விரு மொழிகளும் ஒத்த மொழிகள் என்பதற்குப் போதிய சான்று பகரலாம். பழங் கன்னடத்தில் உள்ள சொல்லாட்சிகள் மேலும் இக் கருத்துக்குத் துணை புரியலாம். (இப்போது, கன்னடச் சொற்களின் இறுதியில் மெய்யெழுத்தைச் சேர்க்கும் முயற்சி நடைபெறுவதாகத் தெரிகிறது)

வெங் - வென்

இனி இங்கே ஒரு சுவையான சொல்லாட்சியைக் காண்போம். தமிழில் வெந்' என்பதற்கும் சிறிதளவு ஒலி வேறுபாடுடைய வென்’ என்பதற்கும் முதுகு என்பது பொருள். வென்னிடுதல் என்றால், முதுகு காட்டி ஒடுதல் ஆகும். தமிழில் உள்ள வென்’ என்பதோடு ஒலித் தொடர் புடைய வென், வெனு, வென்னு, என்பன தெலுங்கிலும் பென்னு' என்பது கன்னடத்திலும் முதுகைக் குறிக்கும். தமிழ் வகரம் கன்னடத்தில் பகரமாக ஒலிப்பதுண்டு; இதன் படி வென் என்பது கன்னடத்தில் பென் ஆயிற்று. கன்னடத்தில் மெய்யீறு உள்ள சொல் இல்லை; மெய்யிறு இருப்பின் 'உ' சாரியை சேர்ந்து விடும் அல்லவா? இதன்படி 'பென்' என்பது பென்னு ஆயிற்று. வென், வென்னு, வெனு, பென்னு என்பவற்றின் அடிப்படைச் சொல்லாகத் தமிழில் உள்ள வெந் (வென்) என்பதற்கு ஒரு சுவையான இலக்கிய மேற்கோள் காண்போம்:-

தலைவன் தலைவியின் மார்பைத் தழுவ விரும்புகிறான். தென்னங் குரும்பை போன்ற அவளுடைய முலைகளின்