பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

மனத்தின் தோற்றம்



மாறாய் உள்ளன - அதாவது, நன்றாயில்லை. காரணம், வேண்டி நேர்ந்து கொண்ட (பிரார்த்தித்துக் கொண்ட) அன்பர்கள் பால், மிளகு, வெல்லம், சூடம் முதலியவற்றை அக் கிணற்றில் கொட்டுகின்றனர்; காணிக்கையாகக் காசும் போடுகின்றனர்; இதனால் தண்ணீரின் தன்மை மாறுதலா யுள்ளது. ஆனால் இந்தக் கிணற்றுத் தண்ணீரைக் கொண்டுதான் கோயிலில் உணவுப் பொருட்கள் ஆக்கப்படு கின்றன; இந்தத் தண்ணீரில் ஆக்கப்படுவதால், உணவுப் பொருட்கள் மிகவும் சுவை உடையனவாகவும் நெடுநேரம் கெடாதனவாகவும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

வைணவர்களால் 'நடுநாட்டுத் திருப்பதி' எனச் சிறப்பித்துத் கூறப்படும் திருவயிந்திரபுரம் திருக்கோயில், திருமங்கையாழ்வாரின் மங்களாசாசனப் பாடல் பெற்று உள்ளது இவ்வூரில் பல்லாண்டுகள் வாழ்ந்த மிகச் சிறந்த வைணவ ஆசாரியரான வேதாந்த தேசிகர் இவ்வூர் இறைவன் மேல் தமிழிலும் வடமொழியிலும் பல பாடல்கள் பாடியுள் ளார். இவ்வூரைப் பற்றி வடமொழியில் பிரம்மாண்ட புராணம், கந்தபுராணம் (சைவக் கந்தபுராணம் வேறு), பிருகந் நாரதிய புராண்ம் முதலிய நூல்கள் உள்ளன. கருட நதியாகிய கெடிலம் கங்கைக்கு ஒப்பானது எனத் திருமாலால் பாராட்டிப் புகழப்பட்டிருப்பதாகக் கந்த புராணம் (வைணவ புராணம்) முதல் பகுதியில் தெரிவிக்கப் பட்டுள்ளது. தமிழிலே, மும்மணிக் கோவை, நவரத்தின மாலை முதலிய சிற்றிலக்கியங்களும் இவ்வூரின் மேல் இயற் றப்பட்டுள்ளன. “வெற்புடன் ஒன்றி அபிந்தையில் வெவ்வினை தீர் மருந்தொன்று அற்புதமாக அமர்ந்தமை” என மும்மணிக் கோவையில் அயிந்தை (அயிந்திரபுரம்) பாராட்டப் பெற்றுள்ளது.

திருவயிந்திர புரத்தில் சித்திரைத் திங்களில் பத்துநாள் பெருவிழா நடைபெறும் ஒன்பதாம் திருவிழா நாளான