பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுந்தர சண்முகனார்

97



பரிசு கொடுத்தனுப்பி, தான் இறைவனுடைய பேரின் பத்தில் ஈடுபடலானாள்.

வசந்தவல்லி ஒருபுறம் ஆறுதலடைய, மற்றொரு புறம் குறத்தியைத் தேடிக்கொண்டு அவள் கணவனாகிய குறவன் ஊர்ஊராய்த் திரிகின்றான். எங்கும்கிடைக்கவில்லை அவள். குறவன் தேடித் தேடிப் பஞ்ச பூத்த கண்ணனாகி, ஆகா ஆகா! அவளை இணைபிரியாதிருப்பதற்கு அவளுடைய ஆடை அணிகள் செய்த நல்வினைகூட நான் செய்ய வில்லையே!” என்று ஏங்குகிறான். அப்போது அவனுடைய தோழனாகிய நூவன் வந்தான். குறத்தியைத் தேடி அழைத்துக் கொண்டு வரும்படியாக நூவனைக் கேட்டுக் கொண்டான். அதற்கு என்ன கைம்மாறு செய்வாய்” என்றான் நூவன். "கைம்மாறா? எனக்குச் சில மந்திரங்கள் தெரியும். அதாவது, கூடியிருப்பவரைப் பிரிக்கும் மந்திரம், பிரிந்திருப்பவரைக் கூட்டும் மந்திரம், கண்கட்டி வித்தை முதலியனவும் கற்றுத் தருவேன்' என்றான் குறவன். அதற்கு நூவன், பலே கெட்டிக்காரனப்பா நீ உன்னை ஆற்றில் இருந்து அப்பால் கடத்திவிட்டு விட்டால், பின்பு விண்வெளி யில் பறப்பேன் என்பாய் போலிருக்கிறது. உனக்குத்தான் பிரிந்தவரைக் கூட்டும் மந்திரம் தெரியுமே - பிறகு ஏன் குறத்தியைத் தேடும்படி என்னைக் கெஞ்சுகிறாய்? நீயும் கெட்டாய். உன் மந்திரமும் கெட்டது. மந்திரக்காரர்கள் எல்லோருமே இப்படித்தான்போல் இருக்கிறது” என்று எள்ளி நகையாடினான்.

பின்பு குறச்சிங்கன் ஒன்றும் பதில் பேச முடியாமல் பேந்தப் பேந்த விழித்துத் தான் தனித்துத் தேடலானான். தற்செயலாகக் குறச்சிங்கனும் குறச்சிங்கியும் குற்றாலத்தில் ஒன்று கூடினார்கள் பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ? சிங்கன், சிங்கி என்று பெயரிட்டுக் கொண்டு ஒருவர்க்கொருவர் உரையாடலாயினர்.