பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

111 4 4 சரிதான், நீரும் ஸ்பான்ஜ் வாங்கிக் கொண்டு வந்திருக்கிறீரா?” நானும் வாங்கிக் கொண்டு வந்திருக்கிறேன் என்று சொல்லுமே! - நீரும் வாங்கிக்கொண்டு வந்திருக்கிறீரா?' என்று கேட்டு என் வயிற்றெரிச்சலை ஏன் கொட்டிக் கொள்கிறீர்?' என்றார் இவர். இவர்களைப் போலவே அங்கிருந்த அனைவரும் ஒருவரிடம் ஒருவர் தங்களுக்குத் தெரியாமலே அகப்பட்டுக்கொண்டு விழித்த போது, 'பாம்பாம், பம்பாம்பாம்!' என்று ‘ஹாரன் அடித்துக் கொண்டே. போக்குவரத்துப் போலிஸாரைக்கூடப் பொருட் படுத்தாமல் படாதிபதி பத்மனாதனின் கார் வாயு வேக மனோ வேகமாக வந்து உள்ளே நுழைந்தது. ஆறாம் அத்தியாயம் 'பாத பூஜை!’ ட டாதிபதி பத்மனாபனைக் கண்டதும் குஞ்சம்மாளுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை - அத்தனை படாதிபதி களையும் வெளியே நிற்க வைத்துவிட்டு, அவரை மட்டும் எப்படி மேலே அனுப்புவது என்ற குழப்பந்தான் அதற்குக் காரணம். எனவே, 'வாருங்கள், வாருங்கள்!' என்றாள் ஒரு தரம்; 'நில்லுங்கள், நில்லுங்கள்!' என்றாள் இன்னொரு தரம். 'இதோ வந்துவிட்டேன்!' என்றாள் ஒரு தரம்; இல்லை, வரவில்லை!' என்றாள் இன்னொரு தரம். 'உட்காருங்கள்!' என்றாள் ஒரு தரம்; நிற்கிறீர்களே!' என்றாள் இன்னொருதரம். அதற்குள் சேலை கட்டவிழ்ந்து விடவே, அவள் அதை அவசரம் அவசரமாகத் துக்கிப் பிடித்துக் கொண்டு அள்ளிச் செருகத் தன் அறையை நோக்கி ஓடினாள். அதுதான் சமயமென்று மற்றவர்களை யெல்லாம் எரித்து விடுபவர்போல் பார்த்த வண்ணம் படாதிபதி பத்மனாபன் மாடிப் படிகளை நோக்கி விரைந்தார்.