பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11

"நல்ல ஆளய்யா, நீர்! எளிமையாயிருக்கக்கூடப் பணக்காரனாய்ப் பிறக்க வேண்டும் என்கிறீரே?... ம்... அதையுந்தான் பார்த்துவிடுகிறேனே, நாளைக்கு! போய் வாரும்; நீர் ஆடம்பரமாகத் தீபாவளி கொண்டாட என்னால் 'அட்வான்ஸ்' கொடுக்க முடியாது!" "நான் அதற்கு வரவில்லையே...?" "பின் எதற்கு வந்தீர்?" "தீபாவளிக்குத் தீபாவளி ஊர்க் குழந்தைகளுக்கெல்லாம் பட்டாசு வாங்கிக் கொடுப்பீர்களே என்று வந்தேன்..." "ஓ, அதுவா!... இதை முதலிலேயே சொல்லியிருக்கக் கூடாதா? - இருந்தாலும், இதை எடுத்துக்கொண்டு போய் வழக்கம் போல வாங்க வேண்டிய பட்டாசை வாங்கிக் கொண்டு வாரும்!” என்று நூறு ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து நீட்டினார் துளசிங்கராயர். குமாஸ்தா அதை வாங்கிக்கொண்டு, "நாளைக்கு ஒரு வசவு மிச்சம்!” என்ற மகிழ்ச்சியுடன் வெளியே கிளம்பினான். அவனுடைய தலை மறைந்ததும் ராயர் கண்களை இறுக மூடிக்கொண்டு, காந்திமகான் படத்தை நோக்கிக் கை கூப்பிய வண்ணம், 'வாழ்க நீ எம்மான் - இந்த வையத்து நாட்டிலெல்லாம்...' என்று வாய்விட்டுப் பாடி, மனம் விட்டு துதிக்க ஆரம்பித்தார். தெரு முழுவதும் எதிரொலி செய்த அவருடைய குரலைக் கேட்டுக் காந்தியைப் பற்றி நினைக்க நெஞ்சமிருந்தாலும், நேரமில்லாதவர்கள் கூட நினைத்தார்கள்! & ● 冷 ఈ్మళి ఈ్మ• ماره கான் அப்துல் கபார்கானை 'எல்லைப் புறக் காந்தி' என்றால், தோல் மண்டி துளசிங்கராயரை 'எங்கள் ஊர்க் காந்தி' என்று சொல்ல வேண்டும் - அவ்வளவு தூரம் எங்களுடைய அன்புக்குப் பாத்திரமாகியிருந்தார் அவர். அதே மாதிரி நாங்களும் அவருடைய அன்புக்குப் பாத்திரங்களாகியிருந்தோமா என்றால், அது வேறு விஷயம். அந்த விஷயத்தை விளக்க அவருடைய 'பொன்மொழி ஒன்றை இங்கே சொன்னால் போதுமென்று நினைக்கிறேன்.