பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யார் மனிதன்? தங்கமணி சொர்க்க லோகத்திலிருந்து மனிதனைக் காணும் பேரவா வுடன் பூலோகத்திற்கு வந்தது ஒரு தேவதை. வந்தவுடன் நேரே காட்டிற்குப் போயிற்று. அங்கு தவம் புரிந்து கொண்டிருந்தார், ஒரு ரிஷி. 'மனிதனைத் தேடி வந்தேன்; நீ யார்?' என்று ரிஷியிடம் வினவியது தேவதை. நான் மகான். தவத்தில் சிறந்த யோகி. கடவுளைப் போல எல்லாச் சக்திகளையும் பெறுவதற்காகத் தவம் பண்ணுகிறேன். உயர்ந்த மனிதன்!” என்றார் ரிஷி கர்வம் பொங்க. 'இல்லை, நீ மனிதன் அல்ல; மனிதனாய்ப் பிறந்தும் மனிதனாய் வாழாதவன்; சுயநலக்காரன்!' நகரத்திலுள்ள ஒரு நந்தவனத்தில் சீமான் ஒருவன் உலாவிக் கொண்டிருந்தான். தேவதை அவன் முன் பிரசன்னமாயிற்று. 'மனிதனைத் தேடி வந்தேன்; நீ யார்?' என்று அவனைக் கேட்டது தேவதை. நான் சீமான்; கோடீஸ்வரன். இந்தக் கிராமம் என்னுடையது; கிராம மக்கள் எனது அடிமைகள். கிராமத்தின் நான்கு திசை களிலும் கோயில்களும், குளங்களும் கட்டி வைத்திருக்கிறேன். ஆண்டிற்கொரு முறை பிராமணர்களுக்குப் பொன்னும் பொருளும் தானம் பண்ணுகிறேன். நானே கெளரவமான மனிதன்!' என்றான் சீமான். 'இல்லை, இல்லை. நீ மனிதனல்ல; மனித வேஷ மணிந்துகொண்டு மனிதனைச் சிறுகச் சிறுகப் பிய்த்து விழுங்கி, இரத்த ஏப்பம் விடும் பயங்கர அரக்கன்!' என்று கூவி விட்டு அகன்றது தேவதை. அரசாங்க மாளிகையின் தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்தார், ஒர் அரசியல்வாதி. 'மனிதனைத் தேடி வந்தேன்; நீ யார்?' என்று தேவதை அவனை வினவிற்று.