பார்த்தார். பிறகு, ‘நல்லவேளை, எல்லாம் வெறும் கனவுதானா?” என்று பெருமூச்செறிந்தார்.
“அப்படி என்ன நடந்து விட்டது, உங்கள் கனவில்?” என்றேன், நான்.
‘அந்த வள்ளுவன் இல்லை, வள்ளுவன் - அவன் இன்று என் கனவில் வந்தான்!’
‘வந்து?”
‘அவன் எழுதிய குறளுக்கு நான் ஒன்றுக்கு இரண்டாக உரைஎழுதி விட்டேனாம்!”
‘இரண்டு உரைகளா?”
‘ஆம் இரண்டு உரைகளென்ன, வாங்குவதற்கு ஆள் இருந்தால் இருநூறு உரைகள் கூட நான் எழுதுவேன் - அதைக் கேட்க இவன் யார்?” +
‘அவர்தானே மூலகர்த்தா?”
‘யாருக்கு எது மூலம் என்று யார் கண்டார்கள்? என்னமோ அவன் பெயருக்கு இப்போது ஒரு மெளசு ஏற்பட்டிருக்கிறது; அதை வைத்துக் கொண்டு பொருள் ஈட்டுவதும் என்னைப் போன்றவர்களுக்கு எளிதாயிருக்கிறது!”
“அந்தப் பொருளில்தான் அவர் தமக்குரியப் பங்கைக் கேட்கிறாராக்கும்?”
“ஆம், இன்று நம் விற்பனையாளரிடமிருந்து முப்பதினாயிரம் ரூபாய்க்குச் செக் வந்ததல்லவா? அதில் பதினைந்தாயிரம் ரூபாய் அவனுக்கு வேண்டுமாம் - இனி யார் அவனுடைய குறளுக்கு உரை எழுதாமலிருக் கிறார்களோ, அவர்களுக்குப் பரிசு கொடுக்க'