34 விந்தன்
தனக்குச் சீதனமாக வந்திருந்த வெள்ளிப் பால் குப்பியை எடுத்து, அதில் அவனுக்கென்று ஏற்கனவே ஒதுக்கி வைத்திருந்த பாலை நிரப்பினாள்.
வேறு வழி, அவள் தாயாகாவிட்டாலும் அவளுடைய கணவன்தான் தந்தையாகி விட்டானே?
3. கல்லாத பேர்களே நல்லவர்கள், நல்லவர்கள்!
அன்று மாலை; கடற்கரை மணல்திட்டின் மேல் அமர்ந்து, நறுமணம்’ என்று எழுதுவதும், எழுதியதைக் கலைப்பதுமாக இருந்தான் ராமமூர்த்தி.
‘தம்பி!’
அவனுக்கு எதிர்த்தாற்போல் அமர்ந்திருந்த டாக்டர் நெடுமாறனார். குரலில் தேனைக் குழைத்து அவனுடைய மெளனத்தைக் கலைக்க முயன்றார்; முடியவில்லை.
‘தம்பி!’
முதல் முயற்சியில் தோல்வியுறவே, அவனுடைய தோளைப் பற்றித் தம்முடைய இரண்டாவது முயற்சியைத் தொடங்கினார் பேராசிரியர்.
தலை நிமிர்ந்தான் தம்பி!
‘இன்று காலை நீ கலாசாலைக்கு வந்ததிலிருந்தே உன்னை நான் கவனித்துக் கொண்டுதான் இருந்தேன்; நீ உன் வசமில்லை!”
‘எப்படி இருக்க முடியும்?’ அப்போதுதான் வாயைத் திறந்தான்.