இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
1. 30 குறுநாவல்கள், தொடர்கதைகள் எழுதும் ஆற்றல் இருக் கிறது. அவற்றிலே காதலையும் காதலர்களையும் இஷ்டம் போல் விளையாட விடுவேன். அது தனி உலகம். எனது இன்ப உலகம், அங்கு எனக்கு எப்போதும் வெற்றி. ஆ, அந்த சுகமே தனி என்று அவர் மனம் மிடுக்குடன் கீதம் இசைக்க, ரத்னவேலு எழுதிக்கொண்டே இருந்தார். (1968)