பக்கம்:மனிதர்கள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. காதல் போயின் மாறி ஆடும் பெருமாள் பிள்ளைக்குக் கோபம் என்பது வரவே வராது! அவரை நன்கு அறிந்தவர்கள் இப்படிச் சொல்வது வழக்கம், ! ஐயா, உம்முடைய பெயர் மாரியாடும் பெருமாள் என்றே எழுதப்பட வேண்டும். அதாவது, மாரியம்மன் வந்து ஆடுகிற பெரிய ஆள்! அதை விட்டுப்போட்டு, நீர் மாறியாடும் என்று எழுதுவதன் வயணம் என்ன? ஆட வேண்டிய பூடத்தை விட்டு விட்டு இடம் மாறி ஆடிய பெருமாளா? அல்லது ஒரு காலில் நின்று ஆடிக் களைத்து அப்புறம் கால்மாறி ஆடும் பெருமாள் என்று அர்த்தமா?” என்று பிள்ளை அவர்களின் நண்பர் சுப்பையா முதலியார் வேடிக்கையாகவும் வினையாகவும் பேசுகிறபோது கூட, அவர் கோபம் கொள்வது கிடையாது. உங்களுக்கு வேலை என்ன?’ என்று சிரித்து மழுப்பி விடுவார். அவ்வளவு தங்கமான மனிதரைக் கூட, பேயாக மாறி உக்கிரமாக ஆட வைக்கும் மந்திரம் போல் ஒரு சொல்" இருக்கத்தான் செய்தது. பிள்ளை அவர்களின் முன்னிலை யில் காதல் போயின் சாதல்’ என்று சொன்னால் போதும், அவர் நிஜமான மாரியம்மன் கொண்டாடியாகவே மாறி விடுவார். காதல் போயின் சாதலாம்! வெங்காயம் போனால் பெருங்காயம்! போங்கடா முட்டாள் பயல்களா! காதலித்து வாழ்வது என்று கிளம்புகிற இரண்டு பேர் வாழ முடிய வில்லையாம். அப்புறம் இரண்டு பேர் சேர்ந்து சாவது மட்டும் எப்படி நிச்சயமான வெற்றிச் செயலாக முடியுமோ தெரியவில்லை. வாழ்வது நம் கையில் இல்லை என்றால், சாவது மட்டும் நம் இஷ்டம்போல் சித்தியாகக்கூடிய விஷய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனிதர்கள்.pdf/61&oldid=855592" இலிருந்து மீள்விக்கப்பட்டது