பக்கம்:மனிதர்கள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67 அக்கோ. அந்த நத்தம் புறம்போக்கைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு நீ நடுத் தெருவிலே நிற்க வேண்டியது தாண்டா. அடேலேய்: ஆமா, ஐயாப்பிள்ளை உன்னைச் சந்தியிலே நிற்க வச்சிரு வாருடா, நிக்க வச்சிரு வாரு' என்று கூப்பாடு போட்டார். ஆனால் மகிழ்வண்ணன் அவருடைய பயமுறுத்தல்களுக் கெல்லாம் மசியவில்லை. அவனுடைய நினைவெல்லாம் சீதையாக இருந்ததால், கனவெல்லாம் அவளாகவே நிழ லாடினாள். . சீதையும் இத்தகைய எண்ணத்தையும் வியப்பையும் அவன் உள்ளத்தில் துரண்டிவிடும் அழகுப் பாவையாக வளர்ந்து வந்தாள். மங்கைப் பருவம் அவள் மேனி முழு வதும் பொங்கி வழிந்தது; கண்ணின் பார்வையில் கவிதை கொட்டியது; இதழ்க் கடையின் குறும்புச் சிசிப்பு அவனையே கொத்தி எடுத்தது, அவள் தன் அத்தை மகள் என்பதில் அவன் பெருமை கொண்டான். அவள் தன் உரிமை, அவளைத் தன்னுடையவளாக வரித்துக் கொள்ள லாம் என்பதில் மட்டற்ற மகிழ்வே கண்டான். அவன் ஆசை வெள்ளத்துக்கு அணைபோட முயன்றார் தந்தை, அவர் முயற்சி வெற்றி பெறுவதாவது? அவன் தனது உறுதியை எடுத்துச் சொன்னான். வருவன வரட்டும் என்றான். சின்னஞ் சிறுசுகள் சந்தோஷமாக இருந்தால் போதும்' எனும் நினைப்புடைய தாய் ஆண்டாள் அம்மாளின் பேச்சு எடுபடவில்லை. சீதை யின் அன்னை லட்சுமி அம்மாளே அழுவதும் புலம்புவது மூலையில் இருந்து மூக்கைச் சிந்திப் போடுவதும்தான் தன்னால் ஆகக்கூடிய கானியங்கள் என்பதை நிரூபித்துக் கொண்டிருந்தாள். வெறும் பேச்சு பையனுக்கு புத்தி புகட்டாது. சொல்லைச் செயல்படுத்தினால்தான் தம்பியா புள்ளெ அப்பா-சாமி என்று அலறி அடித்துக் கொண்டு வருவாரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனிதர்கள்.pdf/69&oldid=855603" இலிருந்து மீள்விக்கப்பட்டது