பக்கம்:மனிதர்கள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

雳 பெட்டிகளும் கவிழ்ந்து விழுந்து விட்டன. பலபேர் செத்து போனார்கள்; ஏகப்பட்டபேருக்கு பலத்த அடி, காயம். இதைக்கேட்ட ராமலிங்கத்தின் உள்ளத்தில் இனம் புரியாத உணர்ச்சி ஒன்று பொங்கிப் பிரவாகித்தது. அதில் ஆனந்தமும் அம்மா நான் பிழைத்தது பெரிய அதிர்ஷ்டத் தான்" என்ற நிம்மதியும் கலந்திருந்தன. அதற்கெல்லாம் மேலாக தேவியின் திருவருள்தான் நம்மை காப்பாற்றி யிருக்கிறது என்ற பரவசமும் இணைந்து ஒலித்தது. அன்னை யின் குறும்புத்தனமும் பாசமும் பிரியமும் நிறைந்த புன்னகை இப்பவும் அவர் கண்முன்னே களிநடம் புரிவது போன்ற உணர்வு அவருக்கு ஏற்பட்டது. 3. அம்மா அகிலாண்ட நாயகி... வேறு எதுவும் கூற முடியாத உணர்ச்சித் தழுதழுப்புடன் அந்த இடத்திலேயே கரம் குவித்து வணங்கினார் ராமலிங்கம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனிதர்கள்.pdf/80&oldid=855617" இலிருந்து மீள்விக்கப்பட்டது