பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர்.எஸ். நவராஜ் செல்லையா

25


மனத்தால் சழுதாயத்துடன் இணைந்து வாழ்வது போலத்தான் திருமணத்திலும் வாழ்கின்றான்.

இரண்டு உள்ளங்களுக்கிடையே எழுகின்ற அன்பு உணர்ச்சி, இரக்கத்தின் எழுச்சி, துன்பங்கள் வந்தால் ஈடுகொடுத்துச் சமாளிக்கும் பொறுமையுணர்ச்சி, எதையும் இன்பமாக ஏற்றுக்கொள்ளும் பெருந்தன்மை, தன் உள்ளம் கவர்ந்தவரின் செயல்களை மெய்யென்றே போற்றி வாழும் நம்பிக்கை எல்லாமே திருமணத்தின் மூலமே நிறையக் கிடைக்கின்றன. நிறைவு பெறுகின்றன.

இந்த நம்பிக்கை இங்கே எப்படி நிறைவேறுகிறது?

இருவரும் இதயத்தால் ஐக்கியமாகலாம் என்ற ஒரு நம்பிக்கை நிறைந்த தைரியத்தில் தாமே திருமணம் அதாவது, தாங்கள் காட்டும் அன்பு மேலேயே ஒரு பூரண நம்பிக்கை வைத்துதான், தங்களது வருங்காலத்தை நிர்ணயித் து, அதனூடே ஆனந்தமான நிம்மதி பெறும்போதுதான், அவர்களது நம்பிக்கை நிறைவேறுகிறது.

அத்துடன், அந்த இருவரும், தங்களின் சக்தியால், புதியதொரு சமுதாயத் தைத் தோற்றுவிக்கவும், செழுமையான சமூகப் பாங்கையும் உண்டாக்கும் ஒரு ஆக்க பூர்வமான முயற்சியிலும் தானே அவர்கள் தங்கள் வாழ்க்கைப் பயணத்தை மேற்கொள்கிறாள்கள்! ஆகவே, அந்த அரிய நம்பிக்கை அவர்களது காதலிலும் கருணையிலும் கலந்தே அமைகின்றது.

இந்த நம்பிக்கை எனக்கு ஏற்படுவதற்குமுன், இன்னும் சில சந்தேகங்களைக் கேட்டு விடுகிறேனே என்றான் இாசு. உலகநாதர் சிரித்துக் கொண்டே தலையசைத்தார். வாசு நீ ஆரம்பிக்குமுன், நான் ஒன்று முன்னுரையாகக் கூறி விடுகிறேன் என்றும் அரம்பித்தார்.