பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

டாக்டர்.எஸ். நவராஜ் செல்லையா

-

ரயிலிலோ பஸ்ஸிலோ நாம் பிரயாணம் செய்வதாக வைத்துக்கொள்வோம். அப்பொழுது பல பேர்களை, புதியவர்களை நாம் சந்திக்கிறோம். அவர்களுடன் பழகும்போது நாம் என்ன செய்கிறோம்? முதலில் நம்மை அறிமுகப்படுத்திக் கொள்கிறோம். புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ள முயற்சிக்கிறோம்.

பேச் சின் இடையிலே அவர் களின் மனம் கோணாதவாறு உரையாடுவதும், தின்பண்டங்கள் தந்து உறவு கொள்வதும் போன்று பழகுவதுபோல, தனது புதிய துணைவியிடமும் பழகி அவளின் அன்பைப் பெறவேண்டும். மனைவியை நட்புக்கு உரியவளாக மாற்றுகின்ற வழியில் ஆரம்பத்தில் சொல்லாடுவதும், உரையாடி மகிழ்வதும், தன்னுடன் இணக்கத்திற்கு ஏற்றவளாகப் பேசி மகிழ்விப்பதும் தான் உரையாடுதல் என்பதில் இருக்க வேண்டும். மனைவியைகிண்டலாகப் பேசித்தான் உரையாட வேண்டும் என்பது கூடவே கூடாது. பொது விஷயங்கள் பேசலாம். அல்லது, ஒருவரைப் பற்றி ஒருவர் பேசி அறிந்து, அவரவர் திறமையைப்புரிந்து, மகிழ்ந்து பாராட்டிக் கொள்ளலாம்.

இதில் முக்கியமாக ஒன்றை உணர்ந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், பெண்ணின் மணமறிந்து பேசி நட்புகொள்ள வேண்டியது என்பதுதான்.

நட்புடன் முகமலர்ந்து பேசிக் கொண்டிருக்கும் பொழுதே, தழுவுதல் போன்ற காரியங்கள் செய்தாலும், பின்னுக்குரிய அச்சமும், நாணமும், மடமும், பயிர்ப்பும் சிளைத் துடிக்க வைக்கும், சில சமயங்களில் தடுத்து நிறுத்தவும் செய்யும். இதுபோன்ற நிலையில், விளக்கின் ಗಿನ இருப்பதைவிட, முகம்தெரியாத மங்கலான