பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒருவர் நினைத்த உடனேயே உடல் உறவில் ஈடுபடமுடியாதா?

இது இயற்கையாக நடக்க முடியாதது. நடக்கக்கூடாதது. துன்பமில்லாத இன்பம்பெற வேண்டும் என்றால் சற்றுப் பொறுமையும் வேண்டும். நினைத்தவுடனேயே, ஆணின் பிறப்புறுப்பானது கிளர்ந்து எழுந்துவிடும். ஆனால் பெண்ணுக்குரியது அப்படி அல்ல. முன்னே விளக்கியது போல, நினைவாலும் செயலாலும் பெண் நெகிழ்ந்து விடும் தருணத்தில், பெண்குறியினுள்ளே ஒரு வழவழப்பான திரவம் ஒன்று உதயமாகி, ஆண்குறிசெல்லும் பாதைக்கு பாய்விரித்து, நடத்திச்செல்வது போல அமைப்பினை உண்டாக்கி விடுகிறது.

அது எப்படி மாமா?

தரைமேலே நத்தை ஊர்ந்து போவதற்கு முன், ஒரு விதத் திரவத்தை ஒழுகவிட்டு, அதன் பிறகு எளிதாக இனிதாக அதன்மேல் ஊர்ந்து போவது போல, ஆண்குறியானது தடையின்றி தாராளமாக, ஊன்றி உள்ளே நுழைந்து செல்வதற்கு ஏதுவாக, அந்தத் திரவம் பெண்குறி பாதை முழுவதும் பரவி நிற்கிறது. அதனால் ஆண், பெண் இருவருக்குமே நல்லது.


எந்த விதத்தில் இது நல்லதென்று கூறுகின்றீர்கள்? அவ்வாறு திரவம் சுரந்து நிற்கும் போதுதான், பெண்ணானவள், உடலுறவுக்குத் தகுதியாகித் தயாராக இருக்கிறாள் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. இல்லையேல், ஆணி குறியானது உள் புகுவதற்கு இயலாமையால் சிரமப்பட, அதன் காரணமாக வலிந்து புணரும் போது, ஆனுக்கு வேதனையும், பெண்ணுக்கு