உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மீண்டும் கணவன் மீது வலியோடும், விசையோடும், விருப்பத்தோடும் அழுத்தி இன்பம் காண்பாள்.

அவளது கண்கள் ஆனந்தப் பூரிப்பின் மிகுதியால் துடித்தெழுந்து துவண்டு, மின் விடுவதையும் காணலாம்.

அத்துடன் ஆணுக்கு விந்து வெளியாவது போலவே பெண்ணுக்கும் வெளியாகும். அவ்வாறு அது வெளியேறியதும் கைகால்கள் விட்டுப்போவது போன்ற ஒரு உணர்வு நிறைவதும், களைப்பின் மிகுதியால் கண்களை மூடிக்கொண்டும், நெட்டிக் முறித்துக் கொண்டும் பெண் தனது திருப்தியை காட்டி விடுவதின் மூலம் நாம் கண்டு கொள்ளலாம்.

அவள் பெற்ற அந்தத் திருப்தியின் மிகுதியால் மனமிழந்து தன் வசமிழந்து, தனது துடையிரண்டையும் துணைவனது துடைகளுடன் இணைத்தும், தழுவியும் பெருமூச்சு விடுவது போன்ற ஸ்...ஸ் என்ற ஒலியெழுப்பி தனது இச்சையின் இச்சையின் உச்சநிலையை திருப்தியை வெளிப்படுத்துவாள்.

பெண் திருப்தியடையவில்லை என்றால்?...

அதிக அச்சமும் கூச்சமும் உள்ள பெண்ணாக இருந்தால், அதைத் தன் மனதுக்குள்ளேயே வைத்து கொண்டு மருகுவாள். கணவன் பெறுகிற திருப்தியைக் கண்டு, ‘அவர் இன்பமடைந்தால், அதுவே போதும்’ என்ற விதத்தில் தேறுதல் அடைவாள். ஆறுதல் கொள்வாள்.

பல நாள் இதுபோலவே, உடலுறவு திருப்தியில்லாமல் முடிந்தால், சில சமயங்களில் அவள் தன்னையறியாமல் பெருமூச்சு விடுவாள். அழுவாள். என்ன செய்வது என்று அறியாமல் அடிக்கடி பலர் கைகளைப் பிசைந்து கொண்டும், சிலர் முறுக்கிக்கொண்டும்,