பக்கம்:மனை ஆட்சி.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

6

 6 ச.அம்மா, நான் விதவையாய்ப் போனதைப் பற்றி, எங்நேரமும் நினைத்துக்கொண்டு, அதைப்பற்றி என்னே ஏசுவது எனக்கு சந்தோஷத்தைத் தருகிறது! ஆயினும் அம்மா ! இதை நான் ஒருவருக்கும் வெளியிடுவதில்லை. உங்களைக் காட்டிக் கொடுப்ப தில்லை, என்று உமக்கு நான் பிரமாணம் செய்து கொடுக்க வில்லையா ? ஏன் அப்படி பிரமாணம்செய்து கொடுத்தோமென்று எனக்கு வருத்தமாகத்தா னிருக் கிறது-ஆயினும்


பா.பிரமாணம் செய்தது வருத்தமாகவா இருக்கிறது! நினைத்தேன் துரதிர்ஷ்டம் பிடித்த மூதேவி! ஏனோ என் வயிற்றில் பிறந்தாய் நீ?


ச.ஏன் அப்படி பிறந்தேன் நான்? எனக்கே தெரிய வில்லை. (அம்மாயி வருகிறாள்)


அ.அம்மா அம்மா கணபதி சாப்பாடு கொண்டு வந்திருக் கிறான், அடுப்பண்டை போயிருக்கிறான்.


பா.சகுந்தலா, எழுந்திரு சீக்கிரம் நாம் மறுபடியும் பட் டினியிருக்க ஆரம்பிக்குமுன், உள்ளே போய் ஒரு வாயாவது சாப்பிடுவோம்.


அ.நம்ப எஜமான் வண்டியெ போலெ ஒரு வண்டி வர்ரத்தே பாத்தேம்மா.


பா.என்ன ! எசமான் வந்துட்டாரா ?


அ.இல்லை அம்மா, நான் என்ன சொன்னேண்ணா, வண்டி மாத்திரம் நம்ப கோச்மான் வண்டியெப் போலயெ இருந்துது. ஆனா எசமான் மாத்திரம் வேரே ஒரத்தன்; அது வேறெ யாருதோ வண்டி.


பா.அப்பா! நல்லவேளெ! பெண்ணே, வா சீக்கிரம் போவோம். அம்மாயி, வெளியேபோய் காத்துக் கொண்டி ருந்து, எசமான் வருவதைப் பார்த்தவுடன் எங்களுக்கு தெரிவி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனை_ஆட்சி.pdf/10&oldid=1412982" இலிருந்து மீள்விக்கப்பட்டது