14
14
தா. முடியாது-இது ஒன்றும் புரியவில்லை எனக்குஇந்த உலகனைத்திலும் எனக்கு விரோதிகள் ஒருவ ருமேயில்லை.
மோ. ஒரு இடத்தில்-ஒரு இடத்தில் தவிர-அது எங்கே சொல்லுங்கள் ?
தா. எங்குமில்லை.
மோ. உங்கள் சொந்த வீட்டிலோ ?
தா. அப்படி இருக்கக்கூடும் என்பது-என் மனதிற் படவில்லை.
மோ. ஆம் ஆகாசத்திலிருக்கும் நட்சத்திரங்களைக் கண் கொட்டாது பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு, தங்கள் அருகிலிருப்பதைக் காணக் கண்ணில்
தா. அப்படி-யிருக்கக் கூடுமா ?
மோ. வேறென்ன இருக்கக்கூடும் ?
தா. தெரிகிறது !
மோ. என்ன ?
தா. அநேக விஷயங்கள் இப்பொழுது எனக்கு ஸ்பஷ்ட மாகிறது.
மோ. எப்படி?-நீங்கள் எனக்கு
தெரிவிக்க மாட்டீர்களா ?
தா. சரி-உன்னிடம் நான் ஏன் சொல்லக்கூடாது ? நீ ஒருத்தி தான் எனக்கு உண்மையான சிநேகிதியா யிருந்திருக்கிறாய்-கடந்த மூன்று நாட்களாக இந்த வீட்டில் ஒரு ஹர்த்தால் ஏற்பட்டிருக்கிறது.
மோ. வீட்டில் ஒரு ஹர்த்தாலா ?-
உமது அபிப்பிராயம் என்ன ?
தா. வீட்டில் சமையலே கிடையாது-எல்லோரும் பட்டினி யிருக்கிறார்கள். இந்த மூன்று நாட்களாக என்மனைவி யும் பெண்ணும் ஒரு பருக்கையும் புசிக்கவில்லை.
மோ. எப்படி -ஏன் ? என்ன காரணத்தால் ?