பக்கம்:மனை ஆட்சி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

19


19 மோ. வேண்டாம், நான் இதோ உடனேபோய் விடுகிறேன்.


தா. ஏதாவது புதிதாய்த் தீர்மானிப்பதன்முன், மூன்றிரவு அதைப்பற்றி யோசித்துக் கழிக்கவேண்டு மென்கிறாரர் களே ?,


மோ. அதற்குள்ளாக அந்த தீர்மான மெல்லாம் கரைந்து மாயமாய்ப் போய்விட இது சாஸ்திர ரசிகர்களுடைய தர்ம சாஸ்திரம் போலும்-சரி- நான் வருகிறேன். நான் எப்படி தீர்மானிக்கிறேன் என்பது உங்களுக் குத் தெரிவிக்கிறேன்.-வருகிறேன்.


தா. போய் வா.

(மிஸ் மோஹர்வாலா போகிறாள்)


கு. திருச்சூழியைவிட்டு வாஸ்தவமாய்ப் போகிறார்களா? அதை நான் நம்பவில்லே தாமு.


தா. அது சரிதான் ; குண்டுராவ்தான், தான் பார்க்கும் எதையும் நம்புவதில்லையே, பார்க்காதவற்றைத்தான் அவர் நம்புகிற வழக்கம்.


கு.என்னப்பா தாமு ? இது தானே, உன் ஆயுள்பரியந்த சிநேகிதரைப்பற்றி உன் மதிப்பு!

தா.உங்களைப்பற்றிய மதிப்பல்ல இது. உலக முழுவதும் கோடானு கோடி குண்டுராயர்கள் குடிகொண் டிருக் கிறார்களே.


கு. இப்பொழுது நீங்கள் ஏதோ சஞ்சல புத்தியில் இருக் கிறீர்கள், நான் புறப்படுகிறேன். -


தா.வாஸ்தவம்-போய் வாருங்கள் (குண்டுராவ் போகுமுன் கடைசியாக ஒரு முறை சாஸ்திரியாரை ஏற நோக்கிவிட்டுப் போகிறார்.தாமோதர சாஸ்திரி கொஞ்ச நேரம் நின்று கொண்டிருந்து யோ சி த் து விட்டு, பிறகு திடீரென்று சாய்வு நாற்காலியின் மீது சாய்கிறார்)

(காட்சி முடிகிறது.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனை_ஆட்சி.pdf/23&oldid=1415107" இலிருந்து மீள்விக்கப்பட்டது