பக்கம்:மனை ஆட்சி.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

26


26


பா. நீங்கள் வேண்டுமென்றால் எதையாவது எண்ணிக் கொள்ளுங்கள். நான் அம்மாதிரியாக ஒன்றையும் எண்ணிக்கொள்ள மாட்டேன். உங்கள் சம்பளத்தில் பாதி எனக்குக் கொடுத்தால்-மற்ற பாதி எங்கே போகிறது ?


தா. அதை நான் என் . செ ல வு க் கா க வைத்துக் கொள்கிறேன்.

பா. உங்கள் செலவுக்காக போதும் இந்த ம னை யை ஆளுவதென்றால் ஒருவர் ஆள வேண்டுமேயொழிய இரண்டு பெயர் ஆளமுடியாது!


பா. நிச்சயமாய் -இது என்ன மடத்தனம் !

மணி வருகிறான்.

தா. யார் அது ?

ம. பரமானந்தபவன் ஹோட்டலிலிருந்து வ ந் தி ரு க் கி றேன், எங்கள் எசமான் கோபால்ராவ் என்னை அனுப்பினார்.

(பார்வதியும் சகுந்தலாவும் அசட்டு முகத்துடன் கலவரப்பட ஆரம்பிக்கிறார்கள்)

தா. எதற்காக ?

ம. புரொபசர் (Professor) தாமோதர சாஸ்திரியார் இந்த வீட்டில் குடியிருக்கிறாராமே ?

தா. இருக்கிறார் -ஒரு விதத்தில், அவரிடம் உனக்கென்ன அலுவல் ?

ம.அவர் எங்களுக்கு பதினெட்டு ரூபாய் எட்டணா பாக்கி கொடுக்க வேணும், அதை வாங்கிவர எனக்கு உத்தர வாயிருக்கிறது. (பார்வதியும் சகுந்தலாவும் பிரமிப்புடன் பார்க்கிறார்கள்)

தா. என்ன அறிவின்மை நான் உங்கள் ஹோட்டலுக்கு வந்ததுமில்லை, அங்கு ஒன்றும் சாப்பிட்டது மில்லையே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனை_ஆட்சி.pdf/30&oldid=1415115" இலிருந்து மீள்விக்கப்பட்டது