144 மனோஹ ரன் அங்கம்-5)
இரண்டாவது காட்சி இடம்- யுத்தகளம். காலம்-பகல்.
சோழ சைனியங்கள் முடியடிக்கப்பட்டு ஒடுகின்றன.
எதிர்புறமாக மாறு வேடத்துடன் மனோஹரன், ராஜப்
பிரியன். சத்தியசீலர் வருகிறார்கள்.
சோ. சை, : அடடே வந்துTடுங்கடா! வந்து டுங்கடா எல்லாம்! நம்போதான் தோத்துட்பூட்டமே! இன்னம் இங்கே யிருந்தா சாவ வேண்டியதுதான். ஒடிப்பூடுவோம் வாங்கோ! மஹாராஜாவெ எதிரிங்கோ கத்திக் சினாங்கோ ! இனிமேலே என்னாயிருக்குது! அடே நம்பொ மனோஹரரிருந்தாக்கா நம்போ இப்படி தோத்துப்பூடுவோமாடா! வாங்கோ! வாங்கோ! நம்ப ஓடிப்பூடுவோம்! -
ரா, அடே பஞ்சைகளே! எங்கே ஒடுகிறீர்கள்? நில்லுங்கள்! நில்லுங்கள்! வெட்கமில்லையா உங்களுக்கு ஓடிப்போக? ஆறிலேயும் சாவு நூறிலேயும் ச வு எனக்கருதி யுத்தத்தில் பிடித்தவாளுடன் மாளுவதை விட்டு, பேடி களைப் போல் எங்கே ஒடுகிறீர்கள்? நில்லுங்கள்!
ம ; அடே! மனோஹரருட னிருந்து முன்பு வெற்றி பெற்ற நீங்கள், இப்பொழுது பாண்டியன் சேனைகட்கு முன் பாகப் புறங்கொடுப்பதா? திரும்புங்கள் எல்லோரும்!
சோசை. : ஆமாம் ஐயா! மனோஹரர் இருந்தா சண்டெ போடுவோம் நாங்க செத்தாலும் பெருசில்ல்ா இண்ணு. இப்போ அவரெப்போலெ யாரிருக் கிறாங்கோ ? < * , &
to f அவருக்குப் பதிலாக நானிருக்கிறேன்! என்னுட்ைய் தோழர்கள் இருக்கிறார்கள்! வாருங்கள் எல்லோரும்! இப்பொழுது ஒன்றுங் கெட்டுப்போகவில்லை. இன்னும் நாம் சண்டை செய்து ஜெயிப்போம்! அதைரியப்படா தீர்கள்! சோசை ஆமாண்டா ஒரு கை பார்ப்போண்டா இவரு தைரிய சாலியாட்டந்தான். இருக்கிறாரு!-உடnதே அந்தப் பாண்டியசேனைங்களெ!
(எல்லோரும் ஒரு புறமாய்ப் போகின்றனர்.1