பக்கம்:மனோகரா.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#0

மனோஹரன் (அங்கம்1

ஏது! நம்முடைய வசந்தசேனை பாடு திண்டா ட்டந்தான்! அவள் ஒ ன் று நினைக்கவெவ்வேறாய் முடிகிறது! மனோஹரருக்குக் குழந்தையும் பிறந்துவிடுமாயின் எரிகிற கொள்ளியை ஏறத் தள்ளினாற்போற்றான். ஆயினும் நான் சீக்கிரம் சென்று நடந்த விஷயங்களை யெல்லாம் சொல்லிவிட வேண்டும். நம்முடைய கடனை நாமொழித்து விடுவோம். அப்புறம் அவள் பாடு அதுவு மல்லாமல் நாணிப்பொழுது அவளுடையமனதிற்கு இதமாய் நடந்து வராவிட்டால் நம்முடையதமயன் அமிர்தகேசரியை அரண்மனை வைத்தியனாக ஏற்றுக் கொள்ளமாட்டாள். |போகிறாள்.

காட்சி முடிகிறது

இரண்டாவது காட்சி

இடம் : அரண்மனையில் வசந்தசேனையினுடைய அந்த

ரங்கமான அறை.

காலம் மரலை

வசந்தசேனையும் நீலவேனியும் பேசிக்கொண்டிருக்கிறார் கள்,

డ్డక) ;

翰f留姆颌 靶

நீலவேனி, அன்றைதினமே இவ்விஷயங்களையெல்லாம் ஏன் என்னிடம் வந்து கூறவில்லை?

நான் என்ன செய்வேன்? இந்த இரண்டு தினங்களும் எனக்கு ஒயாது வேலையிருந்தது அவ்வரண்மனையில். திடீரென்று வந்துவிட்டால் ஏதாவது என்மீது சந்தேகங் கொள்ளமாட்டார்களா?

ஆம், உன் மீதும் குற்றமில்லை; இப்பொழுதாவது வந்து கூறினையே அம்மட்டும். சரிதான். நீ விரைவிற் சென்று இன்னும் அங்கே என்ன நடக்கிறதென்று தெரிந்து அப்போதைக்கப்போது என்னிடங் கூறிக் கொண்டிரு. நான் உனக்கு முன்பு சொல்லியிருக்கிறது ஞாபகமிருக்கட்டும், போ, ~ :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/19&oldid=613269" இலிருந்து மீள்விக்கப்பட்டது