காட்சி-21 மனோஹரன் 13
ఖెడ్జ}65 ;
பெள
డ్ర శ. 6T :
பெள :
ಔ'¢ಹf :
பென் :
♔ണ്ണ :്.
Gusಗೆ :
ராஜப்பிரியனா? அவனுக்கு அவ்வளவு வீரம் எங்கி ருந்து வந்தது: -
ராஜப்பிரியன் சமாசாரம் உங்களுக்குத் தெரியாது. அவன் பயந்தவன்போல் நடிப்பதெல்லாம் அவ்வளவும் வேஷ்ம். அவனையும் சுத்தவீரனென்று நினையும், அவனில்லாதிருப்பானாயின் மனோஹரன் இறந்து நமதெண்ணம் நிறைவேறியிருக்கும் உடலுக்குக் கவசம் போல் அவன் எப்பொழுதும் மனோஹரனை விடாது சாப்பாற்றி வருகிறான்.
அவையெல்லாமிருக்கட்டும். மேல் நடக்கவேண்டிய காரி யத்தைப்பற்றி யோசிப்போம் வேறு வழியில்லை! பெளத் தாயனரே, உமக்கு முதன் மந்திரியாகவேண்டுமென்று உண்மையில் இச்சையிருக்கிறதோ?
அம்மணி, அதைநான் தங்களிடம் பன்முறை கூறியிருக் கிறேன். எல்லாம் தங்களுடைய சித்தம், தாம் மனது வைத்தால் ஆகாமற்போமோ எக்காரியமும்? தாங்கள் மஹாராஜாவிடம் ஒரு வார்த்தை கூறுவீராயின் அந்த நொடி முதல் நான் பிரதான மந்திரி தான்!
ஆனால் நான் உமக்கொரு கட்டளையிடுகிறேன். அதன் படி செய்கிறீரா?
என்னாற் கூடுமானதானாற் செய்யத் தடையில்லை.
இந்த நொடியே புறப்பட்டுப்போய் மனோஹரனை எப்படியாவது கொன்று வருகிறீரா?
அம்மணி! அது அசாத்தியமான காரியம்! எவ்வளவோ இவ்விஷயங்களிற் கைதேர்ந்த அந்த இரண்டு வீரர் களால் ஆகாமற்போன காரியம் என்னாலாகப்போ கிறதா? நேரில் அவனுடன் யுத்தம் புரிந்து கொல் வதோ மும்மூர்த்திகளுக்கும் அசாத்தியம்! அவனைக்
கொல்வது தவிர வேறேதாவது கட்டளையிடும், செய்
கிறேன். - -