காட்சி-4) மனோஹரன் 35
ரா :
வாழ்வானேன்?-1 திடீரென்று மனோஹரனும் ராஜப் பிரியனும் வருகிறார்கள்.1
(மனோஹரனைக் கட்டிக்கொண்டு) பிராணநாதா! பிரானதாதா !
(மனோஹரனை ஆலிங்கனம் செய்து) கண்ணே மனோ ஹரா!
(மெல்ல நழுவப்பார்க்கும் பெளத் தாயணனை ராஜப்பிரியன் கெட்டி யாய்ப் பிடித்துக் கொள்ளுகிறான்.)
கண்ணே! மனோஹரா!
ராகம்-கமாஸ்-தாளம்-சாப்பு.
பல்லவி.
காணக்கிடைத்ததேதோ மைந்தா
கண்ணே உன்னை நான் இன்று (கா)
அநுபல்லவி.
பாணம் பட்டிறந்தாயென்று
பரிதவித்த நான் இன்று (கா)
சரணம்.
பெற்றவென்மனம் பெரிதுங் கலங்கிற்றே
உற்று மலர்ந்த உடல் மலங்கிற்றே
பற்றியெறிந்த என் பாழ்வயிற்றினில்
பாலை வார்த்தாற்போவின்று. (கா)
சுவாமி! தாங்கள் தானே! அப்பொழுதே நினைத்தேன். எங்கே போகிறீர்கள்? சற்றுப் பொறுங்கள். நானும் உடன் வருகிறேன்!
அம்மணி! என்ன சமாசாரம்? இதென்ன உடைவாளில் ரத்தம்?-சத்தியசீலரே! இதெல்லாம் என்ன ?
இளவரசே! சற்றுத் தாமதித்து வந்திருப்பீராயின் உம் அன்னையும் மனைவியும் அக்கினிப் பிரவேசமாகி இறந் திருப்பார்கள். சற்று முன்பாக இந்தக் கப:-ன் இவ்