காட்சி-21 மனோஹரன் 55
sk
இதற்குத்தான் உம்முடைய வயிற்றில் வீணன் நான் ஒருவன் பிறந்தேனோ? பிறந்ததற்கு நல்ல உபகாரம் செய்கிறேன்! நீர் வருந்த நான் பார்த்துக்கொண்டி
ருப்பது! நான் வருத்தப்படுகிறேனென்று உனக் கெப்படி 4
தெரியும்?
நீர் சொல்லாமற்போனாலும் எனக்கு நன்றாகத் தெரியும். அதையறியாவிட்டால் நானுமது மகனோ? (எழுந்திருந்து இதோ ஒரு வார்த்தை கூறுகிறேன். அம்மணி என்பிதா வசந்தசேனையை நீக்கி, உம்மிடம் பிரியம் வைத்து, உம்மை வரவழைத்து. அதே சிம்மா. சனத்தில் உட்கார வைத்துக்கொள்ளும்படிச் செய்ய விட்டால் நான் மனோஹரனன்று, உமக்கு தான் புத்திரனன்று!
ராகம்-அடாணா, தாளம்-ஆதி.
பல்லவி
எண்ணிய சபத மிதுவே-அம்மா நானும் எண்ணிய சபத மிதுவே !
அநுபல்லவி,
எண்ணிலாத் துன்பமுமக் கெவள்செய்தாளோ அவளை இவ்வுலகில் இழிபடச்செய்வேன் என்றுதான் இன்று(எ)
சரனம்
தேகத்திற்றுளிரத்தம் உள்ளமட்டும்
செய்வேன் துரோகியை அநர்த்தம்
ஆகுங்காரியம் அனைத்தும் ஆகட்டும் இதனால்
அன்னையே உம்மனம் அறிந்திடக் கறிவிட்டேன் (எ)
ஐயோ! கண்ணே! என்ன யோசியாது சபதம் செய்து விட்டாய்! முடியாத காரியத்தை நீ இவ்வாறு ஏற்றும்
கொள்ளலாமா? வேண்டாம், நான் சொல்வதைக்
கேள்,