粤*
劇
ւլ ք
- *
萨鹤
- *
壽劃
மனோஹரன் (அங்கம்-3
சத்தியசிலரே, வாரும். உம்மைத்தான் அழைத்துக் கொண்டு வரும்படி கட்டளையிட்டுக்கொண்டிருந்தேன், தாமே இங்கு வந்ததேது தற்செயலாய்:
மஹாராஜா காலைமுதல் போஜனம் செய்யாதிருப்ப தாகச் சேதி வரவே, என்ன காரணமென்று விசாகித்துப் போக வந்தேன். தேகம் ஒன்றும் அளெக்கியமில்லையே?
தேகத்திற்கொன்றும் அசெளக்கியமில்லை,
மிகவும் சந்தோஷம் ஆ ன ல தாங்கள் போஜனல் கொள்ளச் செல்லலாமே ?
இதோ போகிறேன்-ஆயினும் அதற்குள் உம்மை ஒரு கேள்வி கேட்கவேண்டும்; அதற்காகத்தான் உம்மை வர வழைக்கவிருந்தேன்-ராஜததுரோகிகளுக்கு என்ன தண் டனை விதித்திருக்கிறது நமது சாஸ்திரங்களில்?
மஹாராஜா, செங்கோன் முறைப்படி அரசாட்ச செய்யும் அரசர்க்குத் துரோகம் செய்பவர்களை சிரச்சேதம் செய்து விடும்படி மனு கூறியிருக்கிறார்.
மந்திரிகளுடைய கடமை மஹாராஜாவின் உத்தரவின் படி நடக்கவேண்டுமென்பதல்லவா?
ஆம், சந்தேகமில்லை.
சத்தியசீலா! எங்கே பார்க்கிறாய்? உடனே புறப்பட்டுப் போய்-மனோஹரனைக் கொன்று வா!
யாரை?
மனோஹரனை. என்ன மனோஹரரையா?
மஹாராஜா தம்முடைய குமாரரையா?
ஆம்:
இதென்ன என்க்குப் பைத்தியம் பிடித்திருக்கிறதோ: அல்லது மனோப்பிராந்தியோ ?