பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

II 6. | | 8. ||9. |20. 147 மட்டிலடங்காத மகிழ்ச்சியுடன் ஜெக மாதா மகன் வரப் பார்த்திருக்க அஷ்ட திசை புகழப் பட்டத் தரசன் கை கட்டி நடப்பதைப் பாருங்கடி பண்டொரு நாள் சீதை தன்னினையே ராமனும் பாணிக்கிரஹணஞ் செய்தவுடன் அண்டருலகம் மதிக்கப் பெற்றதந்தை அன்னை கெளசலை தன்னை ராமன் நாடி வருவது போலுமடி எங்கள் ராஜன் ராணியுடன் கூடி சேடியர் கூடி பதம்பாட சில மாதர்கள் கூடி நடமாட காதலுடன் ஜெகமாதா மதமலர் கண்டு இருவரும் தெண்டனிட சேதுபதி ராணி முத்துத் திருவாயி சேயனைக் கண்டு அகமகிழ்ந்து ஆர்ேவதித்து அருமையுடன் பெற்ற ஆனந்த மார்பனை முத்தமிட்டு ஆசனந்தன்னில் அமரச் செய்து ராணி அட்சதை இட்டு அமர்ந்திருந்தார். (திருமணக் கும்மி முற்றிற்று)