பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 மற்றும் மன்னரது சென்னை வாழ்க்கையையும் என்றென்றும் நினைவுபடுத்தி கொள்ளத்தக்க அறக் கொடை ஒன்றையும் தமிழ்த்தொண்டாக அமைத்தார். அவர் பயின்ற சென்னை - தாம்பரம்டகிறித்துவக் கல்லூரியில் அந்த அறக்கட்டளை இன்றும் உள்ளது.தமிழ கத்தில் ஆண்டுதோறும் இளநிலைப் பட்டப் படிப்பில் தமிழ்த்தேர்வில்-மாநில அளவில் சிறப்பாக தேர்ச்சிபெறு கின்ற கல்லூரி மாணவனுக்கு பொற்பூவை (Gold medal) அந்த அறக்கட்டளை வழங்கி சிறப்பித்து வருகிறது. பாஸ்கர சேதுபதி மன்னரது "பொற்பூ பெற்றவன் என பெருமையுடன் சொல்லிக் கொள்ளும் பல மாணவர்கள் இன்று இருக்கின்றனர்.