பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ם ום இரவலரின் ஏழ்மை நீக்கிய புரவலர், ஏழிசையாய் இசைப் பயனாய்.இன் தமிழாய் விளங் கும் இறைவனது பாதையில் எண்ணிறந்த பணிகளை இயற்றிய திருத்தொண்டர், குறை இரந்தாருக்கு கொடையின் திருவுருவாக விளங்கிய காவல் தெய்வம் - சால வெளியில் கலந்துவிட்டது. இதயத்திலே இரக்கமும், ஈரமும், மாண்பான சிந் தனைகளும் செயல்திறனும், பசுமையாக படர்ந்து இருக்கும் வரை, மன்னர் பாஸ்கரர் பற்றிய எண்ண இழை களும் அவைகளின் பின்னணியில் இதே.வள்ளலது எண்ன வடிவமும் வாழ்ந்து கொண்டே இருக்கும் அத்துடன் அந்த தெய்வத் திருமேனியின் புகழ் வடிவு, எட்டாத தொலைவில் உள்ள துருவ நட்சத்திரம் போல உயர்ந்து பரந்து காலமெல்லாம் சுடரொளி பரப்பிக் கொண்டு இருக்கும்.