பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஹீரோ 夏酸露 "ஒரே உலகம் கட்சித் தலைவர் ஞானப்பிரகாசம்கூட இதை ஆட்சேபிக்கவில்லை என்ருல், இது எப்படித் தவருக முடியும்? அவர் மிகவும் பாராட்டிஞர். இந்தப் புத்தகம் இனது ஒரே உலகம் கொள்கைக்கு வலுவான ஆதரவாக அமையும் என்று அவர் சொன்னரே என்ருர் பவானந்தம். "நீர் அவருக்கு அவ்வப்போது நூாதும் இருநூறும் செலவுக்குக் கொடுப்பதாகச் சொல்லுகிரு.ர்கள். பின்ன்ே அவர் ஏன் பாராட்டமாட்டார்?’ என மாதவன் நினைத் தான்: வாய் திறந்து சொன்னுளிைல்லை. r பெரியவர் தெரிவித்தார்: இதை எல்லாம் நான் உன்னிடம் ஏன் சொல்லுகிறேன் என்ருல், அதற்கு ஒரு காரணம் இருக்கிறது; எனக்குத் தமிழ் அவ்வளவாக எழுத வராது. நான் என் ஐடியாவை அப்படி அப்படியே குறித்தி வைத்திருக்கிறேன். அவற்றை ஒழுங்குபடுத்தி அமைத் தித் தருகிறேன். நீ அதை நல்ல தமிழிலே எழுதணும். அவ்வளவு தான்." 'அந்த வேலே எல்லாம் எனக்குப் பிடிக்காதய்யா. வேறு ஆகிளப் பாரும்" என்று சொல்லிவிடலாம் என மாதவன் துடித்தான். இருப்பினும், இவர் இப்பவேயா குறிப்புகளே எழுதிவிடப் போகிருர்? இவருக்கு இயல்பாக உள்ள சோம்பல் இவரை லேசில் விட்டு விடுமா? உரிய காலத்தில் வெட்டு ஒன்று துண்டு இரண்டாகச் சொன்னுல் போச்சு என்று தன்னையே அடக்கிக்கொண்டான் அவன். இ ஹி..ஹி. அதி' கென்ன..!" என்று இழுத்தான். இந்தச் சமயத்தில் ஒரு வேலைக்காரன் வந்து, அம்மா கூப்பிடுருங்க” என அறிவித்ததால் பவானந்தம் வீடு நோக்கிப் போகவேண்டிய அவசியம் ஏற்பட்டது. மாதவனத் தேடிக் கொண்டு பாலச்சந்திரனும் பேபியும் வந்தார்கள். நல்ல வேளே! என்று மகிழ்த்தான் அவன். பூர்மதி பவானந்தம் ஆகிய விசாலாட்சி அம்மாளே அடிக்கடி காணும் பாக்கியம் மாதவனுக்குக் கிட்டவில்லை.