பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

亚蓬 மன்னிக்கத் தெரியாதவர் மகளின் கேள்விகள் தந்தைக்கும் அதிர்ச்சியாகவே பட்டன. ஆனல் பேபி இயல்பாக அறிவித்தாள்: வார் சொன்னது சரிதான். பெரியவங்க உண்மையைச் சொல்லவும் பயப்படருங்க. உண்மையைக் கேட்கவும் தயங்குருங்க... உண்மையைப் பார்க்கவும் கூசுருங்க. . ."

இந்த மேதாவி ஸார் யாரோ?' என்று கேலியாக விசாரித்தார் தந்தை.

மாதவன்ஸார் தான் என்ற பதிலேக்கேட்டு அவர் திடுக்கிட்டார்.

இந்த மாதிரி எல்லாம் உனக்குப் பாடம் சொல்லித் தருவதற்காகவா அவனே இந்த வீட்டிலே வைத்திருக்கு? ஏய்: இாப் மாதவனக் கூட்டிவா!' என்று உத்திரவிட்டபடி திண்ணைக்கு வந்தார் பவானந்தம்.

அங்கே நின்ற தோட்டக்காரன் காதுகளிலும் அந்த உத்தரவு விழுந்தது. ஒரு முக்கிய விஷயம் எசமான். இதை யும் கேட்டு விட்டு அவருக்கு ஆள் அனுப்புங்க” என்ருன். என்ன?’ என்று உறுமிக்கொண்டே நாற்காவியில் அமர்ந்தார் பெரிய வர். தோட்டக்காரன் நடந்த விஷயத்தைச் சொல்லச் சொல்ல அவர் ஆத்திரமும் கோப மும் அதிகரித்தன. மேலும் தாமதம் செய்யாமல் ஒரு வேலையாள அனுப்பி வைத்தார். மாதவன் வந்ததும் அவனே மேலும் கீழுமாக வெறித்துப் பார்த்தார் அவர். பாலச்சந் திரனின் அலங்கோல நிலையையும் கவனித்தார். இதெல்லாம் என்ன?’ என்ற கர்ஜனை வெடித் இது அவரிடமிருந்து. - W. பாலச்சந்தர், இதென்ன அலங்கோலம்?’ என்று கத்தினர் தந்தை. - . ஒண்ணுமில்லை, அப்பா!' என்று தினக்குரலில் தெரிவித் தான் பாலு: