பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஹீரோ 證無皺 கீழும் நோக்கினன் மாதவன். உதடுகளை மடித்துக்கொண்டு தலையை ஆட்டினன் இல்லை என்ற தன்மையில். "முன்பு மந்திரம் தெரியும் மாயம் தெரியும் என்று டுப் அடித்திர்களே! என் பெயரை யூகித்துச் சரியாகச் சொன்ன உங்களுக்கு இப்ப ஒரு வழியும் புலப்படவில்லையோ?” என்று கேட்டுவிட்டு, அவள், இ...ஹி..ஹி' என்று இளித்தாள். அப்பொழுது பளிச்சிட்ட அழகான அரிசிப் பல் வரிசை யும் மென்மையான இனிய உதடுகளும்-அவற்றை அவன் எங்கே பார்த்திருக்கிருன்? எங்கே பார்த்தான்? கையால் தன் தலை மயிரைப் பிடித்து இழுத்துக் கொண்டான். "நீ, நீ... வந்து..." அவன் படும் வேதனையைக் கண்டு அவள் கும்மானி யிட்டுச் சிரித்தாள். பின் பேபி என்று அறிவித்தாள். பேபி பாலச்சந்திரன் அக்காளா? தாங்க முடியாத ஆச்சரியம் ஏற்பட்டது அவனுக்கு. . அவன் முகபாவத்தைக் கண்டு குதூகலம் எய்தினுள் அவள். காலைப் பொன்வெயிலில் மினுமினுக்கும் புது மலர்போல் குளுமையும் வனப்பும் பெற்றுத் திகழ்ந்த பேபியை வியப் புடன், ஒரே பார்வையாகப் பார்த்துக்கொண்டிருந்தான் அவன். அவளுல் நம்பவே முடியவில்லை. பேபியா அட, என்னமா வளர்ந்துட்டே' எத்தனையோ வருஷங்கள் ஆச்சுதே. இன்னுமா நான் சின்னப் பெண்ணுக இருப்பேன்! என்று கூறிச் சிரித்தாள் பேபி. . இப்ப தலைமுடியைக்கூட வளரவிட்ருக்கிறே. இரட் டைச் சடை. . பேஷ் பேஷ்!" . அவன் புகழ்ச்சியைக் கேட்டு மகிழ்ச்சிதான் அடைந் தாள் அவள். . .