பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுப் பெண் § பெரியவள் பயந்து, பார்த்து நில்லுங்க. நல்லாப் பாருங்க. கதவுக்குப் பின்னலே, மூலையிலே எங்காவது ஒண்டியிருக்கும்’ என்று சொன்னுள். - இதற்குள் மற்றப் பெண்களுக்குச் சிரிப்பை அடக்க முடிய வில்லை. ஒருவர் இருவராய்ச் சிரிப்பைச் சிந்தி, தொடர்ந்து எல்லோரும் கலீரிட்டுக் குதூகலித்தார்கள். . அகிலாண்டத்தின் சின்ன மகன் பார்வையில் பாம்பு பட்டுவிட்டது. அசையாமல் கிடந்த ரப்பர் பாம்பை எடுத்து அவன் கந்தரத்தின்மேல் வீசிஞன். எல்லாம் இந்த அத்தை பண்றதுதான். ரப்பர் பாம்பைப் போட்டுவிட்டு உன்னைப் பயம் காட்டுகிருள்' என்ரு:ன். பயந்திட்டிகளா மதனி? என்று கூவிக்கொண்டு, பெரியவளைக் கட்டிப்பிடித்தாள் சுந்தரம், 'ಹ60F விளையாட்டு மதனி. நீங்க நெசமாகவே பயத் துட்டீங்களே!" என்ருள், சிரித்தாள். "நல்ல பொண்ணு வந்து சேர்ந்தே! இதெல்லாமா விளையாட்டு?’ என்று பெரியவள் அலுத்துக்கொண்டாள். 'அத்தை உன்னை மட்டுமா பயம் காட்டுகிரு வாய்க் காலுக்கு இந்தப் பாம்பை குடத்துக்குள்ளே வைத்து எடுத்துக்கொண்டுடோரு. அந்தி நேரத்திலே, அங்கே நிற்கிற பெண்கள் பக்கத்தில் விட்டெறிந்து, ஏ. பாம்பு பாம்பு என்று கத்தி கலாட்டா பண்றது. மற்றவங்க பயப்படுவதைப் பார்த்து கைகொட்டிச் சிரிக்கிறது. இவளுக்கும் இவள் சிநேகிதி ஒருத்திக்கும் இதுதான் விளையாட்டு!" என்று சின்ன மகன் பாலு அறிவித்தான். அவனுக்கு அவள்மீது சிறிது கோபம் உண்டு. அவன் படிக்கிற சமயங்களில் அவள் ஏதாவது தொந்தரவு செய்து, படிக்கவிடாமல் கெடுப்பது வழக்கம். சில சமயம் நானும் படிக்கிறேன் என்று எட்டு வீட்டுக்குக் கேட்கும்படி கூப்பாடு போட்டு அமைதியைக் குலப்பாள். அல்லது அவளும் மற்றப் பெண்களும் சேர்ந்துகொண்டு கதை பேசுகிழுேம்-பாட்டுப்