பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

翼委 மன்னிக்கத் தெரியாதவர் தான், மூன்று பேரும் திடுக்கிட்டுப் பார்த்தனர். தெருவி விருந்து படிகள்மீது ஏறி வந்து நின்ற சுப்பிரமணியனை அம் போதுதான் கவனித்தனர். கணவன் முகம் கடுகடுப்புற்றிருந்தது, என்னடா விளையாட்டு இது? அவள் கிட்டே என்ன வம்பு?’ என்று உறுமினுன் அவன். - "நான் ஒண்னும் விளையாடலே! என்று கடுப்பாகப் பதிலளித்தான் பாலு. - 'யின்னே அவளா உன்கூட விளையாட ஆசைப்படுரு: காலி ராஸ்கல்: சுப்பிரமணியன் குரலில் உஷ்ணம் ஏறியது. அவள் ஏன் வழியை மறிச்சுக்கிட்டு நிற்கணுமாம்: நாங்க உள்ளே போகணும் என்றதும் அவள் விலகி வழி விட வேண்டியது தானே? போறதைப் பார்ப்போம்னு சவால் விட்டால்...' சுப்பிரமணியனுக்கு என்னவோ ஆங்காரம். நீ சின்னப் பையனு லெட்சணமா இல்லையே. ஒரே அடியாத் துள்ளா தடே! என்ருன் அடக்கி வைக்கிறதுக்கு ஆள் இல்லைன்னு தினைச்சுக்கிடாதே தம்பி. நிதானமா நட என்றும் எச்சரித்

தான. பாலுவுக்கும் கோபம் எவ்வியது. நீரு பெரிய சூரரு தான் தெரியுமே! முதல்லே உம்ம பெண்டாட்டியை அடக்கி வையும். அப்புறம் மற்றவங்களே அடக்குறதைப் பற்றி யோசிக்கலாம் என்ருன். - கணவன் ஆத்திரத்தோடு அவனை அறைய விரைபவன் போல் நெருங்கின்ை. பாலுவும் விறைப்பாக முறைத்துக் கொண்டு நின்ருன். சத்தம் கேட்டு அகிலாண்டம் வெளியே வந்தவள், 'பாலு இங்கே வா. நீ ஏன் சண்டைக்குப் போறே?" என்று சத்தம் போட்டாள். அண்டை வீடுகளில் உள்ள பலரும் உள் வாசலில் கூடிவிட்டார்கள்.