பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுப் பெண் 39 அவளேயே வைத்தகண் வாங்காமல் உற்று நோக்கிக் கொண்டிருந்தான் அவன். என்ன பாசாங்கு! எவ்வளவு ஏமாற்று! மனக் குமுறலை அடக்கிக்கொண்டு, அந்தக் கதவைச் சாத்தித் தாழ்ப்பாள் போட்டுவிட்டு இப்படி வா!' என்ருன். அவளுக்கு வெட்கம் வந்தது. அவன் நோக்கத்தை அவள் தவருகப் புரிந்துகொண்டு, சீ, இந்த நேரத்திலா? அந்தி வேளையிலே கதவை அடைத்துக்கொண்டு இருந்தால் அக்கம் பக்கத்திலே உள்ளவங்க என்ன நினைக்கமாட்டாங்க?' என்று முணுமுணுத்தாள். அவன் வேகமாக எழுந்துபோய் முன்கதவை அடைத்துத் திாழிட்டுவிட்டு வந்தான். பட்டப் பகலில் எவனே ஒரு திடியன் மேலே சாய்ந்து சிரிச்சுப் பேசி, கொஞ்சிக்கிட்டுப் போகையிலே, மற்றவங்க ஒண்னும் நினைக்கமாட்டாங் களோ? என்று உறுமிக்கொண்டு வெறிநாய் மாதிரி அவளே அணுகினன். - ஆசை முற்றிய ஆர்வ அணைப்புக்குத்தான் அடிபோடு கிருன் என்று நாணி எதிர்பார்த்து நின்ற அவளுக்கு அவன் பேச்சு சூட்டுக்கோவின் தீண்டுதல் போலிருந்தது. அவள் பதறிப் பயந்து அவனைப் பார்த்தாள். தயாராக மறைத்து வைத்திருந்த நீண்ட சவுக்கை எடுத்துச் சொடுக்கினன் அவன். அவள் நடுநடுங்கிக் கையெடுத்துக் கும்பிட்டாள். தான் தப்பா ஒண்ணும் நடக்கலே. அவருகூட சினிமா பார்க்கப் போயிருந்தேன். ஒருபோதும் நான் ஒரு பாவமும் செய்யலே!’ என்று அபலைச் சிறுமிபோல் அலறினுள். அவனுக்கு வெறி. அவளுக்கு எவ்வளவோ சுதந்திரம் கொடுத்து, அவள் இஷ்டங்களை எல்லாம் அவள் மனம் திருப்தி அடையும்படியாக நிறைவேற்றி வந்தும், தன்னே அவள் ஏமாற்றி வஞ்சித்து அதில் சந்தோஷமும் அடைகிருள். என்று. - - .