பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75 மன்னிக்கத் தெரியாதவர் விடாதே. இதுதான் உன்னிடம் நான் கெஞ்சிக் கேட்டுக் கொள்வது. . . . 'இது என்ன அத்தான் இது? நீங்கள் ஏன் இப்படிப் பேசுகிறீர்கள்?...அத்தான்...” உணர்ச்சித் துடிப்புடன் கைநீட்டிய காந்திமதியின் பிடிக் குள் சிக்க மறுப்பவன்போல் விலகி நின்ருன் மாதவன். காந்தி, உன் அப்பாவும் அம்மாவும் நிச்சயம் செய்துள்ள இடம் பெரிய இடம். பணமும் அந்தஸ்தும் நிறைந்த வர்கள்..." கைகளால் தன் காதுகளைப் பொத்திக்கொண்ட காந்தி மதி அலுப்புடன் சொன்ள்ை: போதும் போதும். நீங்கள் ஒன்றும் வர்ணிக்க வேண்டாம். ..." மாதவன் தொடர்ந்து கூறினன்: நான் எப்படி வாழப் போகிறேன், என்ன ஆவேன் என்று எனக்கே தெரியாது. ஆல்ை ஒன்று நிச்சயம். என் வாழ்க்கைப் பாதை பசும்புல் மெத்தென அமைந்த சமநிலத்தில் செல்லப் போவதில்லை. செங்குத்தான பாறைகள் மீதும், கிடுகிடு பள்ளங்களிலும், வழுக்குப் பிரதேசங்களிலும் செல்லக்கூடும். . . . . எங்கு போனுலும், எப்படி ஆயினும் நானும் உங்கள் நிழல் போல உங்கள் கூடவே வரத் தயாராக இருக்கிறேன். இன்றே இப்பொழுதே உங்கள் பின்னல் நான் வந்துவிடு இறேன்; அத்தான், என்னக் கைவிட்டு விடாதீர்கள்’ என்று கெஞ்சினுள் அவள். - மாதவன் உறுதியாகத் தலை அசைத்தான். காந்தி, நான் உனக்குக் கேடு நினைக்க மாட்டேன். உன்னைப் போன்ற - உத்தமப் பெண்ளுேடு வாழ்ந்து சுகம் பெறும் பாக்கியம் செய்தவனில்லை நான். என்ைேடு வாழத் துணிந்தாலும், நீ சுகம் பெறமாட்டாய். உன் வாழ்வை நீ பாழாக்கிக் கொள்வ் தோடு, என்னையும் செயலற்றவனுக்கி விடுவாய். எனது புதிய திட்டத்தை வெற்றிகரமாக்குவதற்கு..."