பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 மன்னிக்கத் தெரியாதவர் புதல்வரும், மாதவனின் தந்தையுமான சிதம்பரம் பிள்ளை ஆரண யோக்கியருமில்லை. முழு அயோக்கியருமில்லை. சிதம்பரம் பிள்ளை சர்க்க்ார் உத்தியோகத்தில், பொறுப் பான ஒரு பதவி வகித்தார். அந்தப் பதவிக்கு உரிய அதிகாரத்தைவிட அதிகமான ஆர்ப்பாட்டங்கள் செய்து அட்டகாசமாக வாழ முடிந்தது அவரால். அவருடைய எடுப்பான தோற்றமும், மிடுக்கான குரலும், யாருக்கும் அஞ்சாத துணிவும் அவருக்குப் பக்க பலங்களாக துணை தின்றன. மேலும், கால நிலையும் மக்களின் பண்பாடும் அவரைப் போன்றவர்களின் ஆட்சிக்கு உறுதியான தளம் அமைத்துக் கொடுத்தன. அதிகாரி வீட்டுக் கோழிமுட்டை, சணப்பன் வீட்டு அம்மியையும் உடைக்கும்’ என்ற அபத்தமான பழமொழியை வேதவாக்காக நம்பி, அடங்கி ஒடுங்கி அஞ்சிக்கிடந்தவர்கள் வாழ்ந்த காலம் அது. சிதம்பரம் பிள்ளையைப் போன்ற துணிந்த கட்டைகள் தங்கள் இஷ்டம்போல் ஆட்சிபுரிய முடிந்தது. தங்கள் அதிகார எல்லைக்குள் தாங்களே ராஜாக் கள் என்ற நம்பிக்கையோடு அவர்கள் தடியடி தர்பார் நடத்த முடிந்தது. அந்தக் காலத்திலே, அவர்களைத் தணிக்கை செய்வதாகப் பெயர் பண்ணி, அரித்துப் பொறுக்குவதற்காக மேலதிகாரிகள் விஜயம் செய்தால், சில்லறை தேவதைகள் ஜனங்களிடமிருந்து பிய்த்துப் பிடுங்கி துரை’க்குத் திருப்தியாக வாய்க்கரிசி போடுவதும் அனுபவ சாத்தியமாக இருந்தது அப்போது. இந்த முறையினல் இலாகா அதிகாரிகளிடம் நல்ல பெயர் பெற்ற பிள்ளையவர்கள் ஊராரிடம் நற்பெயர் சம்பாதிப்பத்ற் காகக் கோயில், தானதர்மம் முதலியவைகளில் கொஞ்சம் தாராளத்தனம் காட்டுவார். ஊரார் குறைகளை விசாரித்து ஆலோசனைகளும், தீர்ப்புகளும் வழங்குவார். தனிப்பட்ட முறையில் நலம் பெறுவதற்காக, மதுக்குடி, தாசி உறவு முதலியவற்றில் ஈடுபாடுடைய ரசிகராகவும் வாழ்ந்தார்.