பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஹீரோ 荔器 மாதவன் பட்டணம் வந்து சேர்ந்தான். - கெட்டும் பட்டணம் சேர்’ என்பது மட்டுமே சரி யென்றில்லை. கெடுவதற்கும், வேறு பலரைக் கெடுப்பதற்கும் பட்டணம் சேர்வது முறையேயாகும். அவனுடைய திட்டத்தை அமுல் நடத்துவதற்கு முதலில் எந்தத் துறையில் பி ர வே சிப்பது என்று புரியவில்லை அவனுக்கு நாளாவட்டத்தில சகல துறைகளிலும் தனது ஆட்சியை நிலைநாட்டுவது என்ற பரந்த லட்சியம் அவனுக்கு இருந்தது. ஆயினும், ஆரம்பத்தில் அடி பதிப்பதற்கு ஒரு சிறு இடமாவது வேண்டாமா? ஏதாவது கிடைக்காமலா போகும்! பார்த்துக்கொள்ள லாம் என்ற தெம்புடன் கிளம்பின்ை அவன். அவனிடம் கொஞ்சம் பணம் இருந்தது. பட்டினி கிடக்கக்கூடிய சக்தியும் பழக்கமும் இருந்தன. எப்படியும் ஒரு மாதத்தை ஒட்டிவிட லாம், அதற்குள் நிச்சயமாக ஒரு வாய்ப்பு ஏற்பட்டே தீரும்" என்ற நம்பிக்கையும் அவனுள் ஓங்கி வளர்ந்தது. துணிந்துவிடுகிறவர்களுக்கு அதிர்ஷ்டமும் துணைபுரியும் என்று சொல்கிருர்கள். சில சமயம் அது சரி என்றே தோன்று கிறது. மாதவனுக்கும் அதிர்ஷ்டம் ஒரு சந்தர்ப்பத்தை உண்டாக்கிக்கொடுத்தது. - தற்செயலாக அவன் பார்வையில் பட்டது பத்திரிகை விளம்பரம் ஒன்று. பணக்காரர் ஒருவரின் செல்வ மகனுக்குக் கல்வி கற்பிக்கவும் நல்ல துணைவராக உதவவும் ஒருவர் தேவை; தங்கும் இடம், உணவு முதலிய வசதிகளும் செய்து தரப்படும் என்று கூறியது அது. ஆகா இதைவிட நல்ல வாய்ப்பு நமக்கு எங்கே எதிர்ப் படப் போகிறது? பணக்காரர் தன் பையனுக்குக் கல்வி புகட்ட விரும்புவது நி யா யம். ஆனல் அவனுக்கோர் நண்பனுய், ஞானசிரியய்ை, வழிகாட்டியாய் விளங்கக்கூடிய ஒருவனைக் கூலிக்குப் பிடிக்க விரும்புகிருரே அவர், பணச் செருக்குத்தானே காரணம்!’ என்று எண்ணின்ை அவன்.