பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8理 மன்னிக்கத் தெரியாதவர் காரணம் எதுவாக இருந்தால் நமக்கு என்ன? இந்த வேலை எனக்குக் கிடைத்தால், அதை முதல்படியாகக் கொண்டு மேலே முன்னேற முயற்சிக்கலாமே என்று தீர்மானித்தான் அவன். குறிப்பிடப்பட்ட விலாசத்தைத் தேடிச் சென்ருன். - மாதவன் சந்தித்த பெரிய மனிதர் பவானந்தம் வசதி கள் பலவும் படைத்தவர். அவருடைய பண மதிப்பு, அவர் தோற்றத்திலும் பார்வையிலும் பேச்சிலும் விளம்பரமாகிக் கொண்டிருந்தது. அவர் வீடு பெரிதாய் விசாலமாய் அமைந் திருந்தது. முன்புற கேட்"டிலிருந்து, வீட்டுக்குச் செல்ல ஒரு பர்லாங் தூரத்திற்கு அருமையான பாதை. அதன் இரு புறங்களிலும் பூத்துக் குலுங்கும் மலர்ச் செடிகள். அதை ஒட்டிய தோட்டத்தில் கண்ணுக்குக் குளுமை தரும் வகை வகையான பூச்செடிகளும், வெதும் இலே அடர்ந்த செடி களும் தளதளவென்று நிமிர்ந்து நின்றன. இவ்வீட்டில் பஞ்சத்தின் சாயைக்கூடப்படியாது என்றே தோன்றுகிறது’ என நினைத்தான் மாதவன். முன் அறையில், நன்கு விளைந்த தக்காளிப் பழத்தை ஞாபகப்படுத்தும் மே ணி மினுமினுப்போடு ஈளிசேரில் சுகமாகச் சாய்ந்திருந்தார் பெரியவர். அவர்தான் உயர்திரு. பவானந்தமாக இருக்கவேண்டும் என்பது முதல் பார்வையி லேயே அவனுக்குப் புரிந்தது. அவன் திண்ணையில் அடி எடுத்து வைத்ததும் அவர் திரும்பி அவன் பக்கம் பார்வை வீசினர். யார்? என்ன விஷயம்?' என்று கேட்பதுபோல் தலையை ஆட்டிஞர். விளம்பரத்தில் கண்டபடி..." மாதவன் பேச்சை ஆரம்பித்ததுமே, அவர் வெடுக் கெனச் சொன்னர்: "சரி சரி, கொஞ்ச நேரம் அங்கே தில்லும் என்று. - அவனுக்கு ஆத்திரம் வந்தது. பன மமதை வாய் திறந்து விசாரிக்க முடியவில்லே, பாரேன். பேசத் தொடங்