பக்கம்:மயக்கம் தெளிந்தது.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

f 12

நல்ல ஆராக்கியமான உடல் நலமும்தான் பாழாய்ப் போகிறது என்பதை நன்றாக மனதில் புரிந்து கொண்டு ஒவ்வொரு மனிதனும், இனிமேல் நான் குடிப்பதில்லை என்று உள்ளத்தில் உறுதி பூண வேண்டும். அப்போதுதான் காந்திஜி கனவு கண்ட ராமராஜ்ஜியம் இங்கே பிறக்கும் என்று பலவேசம் பிள்ளை கூறிக் கொண்டு வரும்போது ஆறுமுகம் ஆவேசம் வந்தவனைப் போல் கூறி னான்:

என் உசிருக்குசிரான பெண்டாட்டி, பிள்ளை. சத்தியமா, இனி நான் குடிக்க மாட்டேன். இது சத்தியம்’ என்றான். -

பலவேசம்பிள்ளை அவனை ஒருமுறை ஆழ மாகப் பார்த்தார்.

'இது நீ எனக்காக-என்னைச் சந்தோஷப் படுத்துவதற்காகக் கூறிய சத்தியமல்லவே? என்று கேட்டார்.

'சத்தியமாக இல்லை’ என்று ஆறுமுகம் அதற்கும் சத்தியம் செய்தான்.

பலவேசம் பிள்ளை கூறினார்: 'இப்படி எடுத் ததற்கெல்லாம் சத்தியம் செய்கிறவர்களை நான் எளிதில் நம்புவதில்லை. சத்திய்ம் என்பது ஒரு சொல்தான். அதை எந்த நோக்கத்திற்காகக்