பக்கம்:மயக்கம் தெளிந்தது.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

113

1 s 3

கூறினோம்-அதை நம்மால் காப்பாற்ற முடியுமாஎன்பதைப்பற்றி எல்லாம் தீவிரமாக யோசித்த பிறகுதான் சத்தியம் என்கிற வார்த்தையை உபயோகிக்க வேண்டும்.

காந்திஜி முன்னால் நீ சத்தியம் செய்திருக் கிறாய். பொங்கல் திருநாளான இன்றிலிருந்து இந்த நிமிஷத்திலிருந்து குடிக்காமல் இருக்க உன்

மனதில் உறுதி இருக்கிறதா?’ என்று கேட்டார்.

"நிச்சயம் இருக்கிறது எஜமான் நீங்க என் னைப் பார்க்கத்தானே போlங்க! என்று

‘அப்படியா என்று அவனை அணைத்துக் கொண்ட பலலேசம் பிள்ளை, மிகவும் மகிழ்ந்து போனார். பிறகு வீடு நிரம்பக் கூடியிருக்கும் தன்னுடைய வேலையாட்களையும், பண்ணை யாட்களையும் பார்த்துக் கேட்டார். ==

இந்த நிமிஷம் முதல் குடிப்பதில்லை என்று ஆறுமுகம் சத்தியம் செய்திருக்கிறான். ஆறுமுகத் தைப் பின்பற்றி உங்களில் யாருக்காவது குடிப்பழக் கத்தை விட்டு விடுகிற மனத்தெம்பு இருக்கிறதா என்று கேட்டார்.

மய-8