17
17
உடனே பூவாயி சிறிய விசும்பலுடன், "ஆமாங்க. நேத்து கொஞ்சம் அதிகமாகவே போட்டுட்டாரு போலிருக்கு, நேத்துப் பூரா வீட்டிலே ஒரே ரகளை’’, என்றாள்.
பலவேசம் பிள்ளை ஆழ்ந்த .ெ ப ரு மூ ச் சு விட்டார்: ‘'ம்...அதுதானே பார்த்தேன். கட்டைப் பார்த்ததுமே நான் நினைச்சேன். இதுக்குத்தான் துரை நேத்திக்கு எங்கிட்டே பூராப் பணத்தை யும், தொன தொணத்து வாங்கிக்கிட்டுப் போனானா? அப்பவே நான் நினைச்சேன்; நெனச்ச மாதிரியே தகவலும் வந்திடுச்சு 22.
'தகவலுங்களா? என்னங்க எஜமான் அது?: பூவாயி பரபரப்போடு கேட்டாள்.
பலவேசம், ‘பூவாயி, எனக்குத் தெரியாமே இந்தக் கிராமத்திலே ஒரு காரியம் நடந்துருமா? உன் புருஷன், இன்னும் அவனைச் சுற்றியிருக்கிற சில நம்ம பண்ணை ஆட்கள் ஒவ்வொருத்தனும் என்ன பண்ணிக் கிட்டு இருக்காங்கன் னு, எனக்கு அப்பப்ப தகவல் வந்துக் கிட்டுத்தான் இருக்கு. இந்த மாதிரி ஏதாவது நடந்து, ஒரு நாளைக்கு நீ எங்கிட்டே வந்து நிப்பேன்னு எனக்கு எப்பவோ தெரியும்?’ என்றார்.
என்னங்க எஜமான்; தெரிஞ்சிக்கிட்டேவா; இப்படிச் சும்மா இருந்தீங்க???
மய-2